திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்து பரமனத்தில் ஊராட்சி காமராஜர் நகர் பகுதியில், ஜவ்வாதுமலை அடிவாரத்தில் இருந்து செல்லும் பழங்கால குதிரை ஓடையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்து ஓடை குறுக்கே தடுப்பு அமைத்ததால், மழை நீர் மற்றும் கழிவு நீர் வெளியேற வழியின்றி குளம் போல தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. இந்த சுகாதார சீர்கேட்டை கண்டித்து செங்கம் - குப்பநத்தம் சாலையில் வாகனங்களை சிறை பிடித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.