இந்திய மல்யுத்த வீராங்கனைகள் 10க்கும் மேற்பட்டோருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக எம்பி பிரிஜ் பூசன்சிங்கை கைது செய்யக்கோரி சிஐடியு மாவட்டத் தலைவர் டி.முரளி தலைமையில் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் எம்.பி.ராமச்சந்திரன், மாதர் சங்க மாநில துணைத்தலைவர் எஸ்டி.சங்கரி, விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் புண்ணிய மூர்த்தி, விவசாயிகள் சங்க மாவட்ட துணைத்தலைவர் ஜி.நரசிம்மன், மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், லொ.நவீன்குமார் (வாலிபர் சங்கம்) ஆகியோர் பேசினர். இதே கோரிக்கையை வலியுறுத்தி குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.