சென்னை, மே. 25 - சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி பாலச்சந்தர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது தொடர்பாக 3 ரவுடி களை போலீசார் தேடி வரு கின்றனர். இந்த நிலையில் இந்தக் கொலை சம்பவம் தொடர் பாக பாலச்சந்தரின் உறவினர் ஷர்மிளா என்பவர் சிந்தா திரிப்பேட்டை காவல் நிலை யத்தில் புகார் அளித்துள் ளார். அதில், ‘‘எனது சகோதரர் தீபன் சிந்தாதிரிப்பேட்டை, அய்யா முதலி தெருவில் ரெடிமேட் துணிக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்த ரவுடி பிரதீப்பின் மனைவி மற்றும் அவரது உறவினர் ஆகி யோர் அடிக்கடி வந்து புதுத் துணி எடுத்துக் கொண்டு பணம் தராமல் ஏமாற்றி வந்த னர். இது தொடர்பாக கடை யின் உரிமையாளர் தீபன் பணத்தை பிரதீப்பிடம் கேட்ட போது அவரை பிரதீப் மிரட்டி னார். இது தொடர்பாக பாஜக வில் முக்கிய பதவியில் உள்ள எனது உறவினர் பாலச்சந்தி ரனிடம் தெரிவித்தோம். அவர் பிரதீப்பை கண்டித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரதீப்பும் அவ ரது கூட்டாளிகளும் பாலச் சந்தருக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர். கடந்த 22ம் தேதி அரு ணாச்சலம் தெருவில் உள்ள டீ கடையில் எனது சகோதரர் தீபன் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது பிரதீப், அவரது சகோதர் சஞ்சய் ஆகியோர் வந்து, “பாலச்சந்தரை கொலை செய்து விடுவோம்” என கூறி மிரட்டி சென்றனர். இது குறித்து சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலை யில் தான் சகோதரர் பாலச் சந்தரை பிரதீப் கும்பல் கொலை செய்து விட்டனர்” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர் பாலகிருஷ்ணன் பணியில் அலட்சியமாக இருந்த காரணத்திற்காக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.