தாம்பரம் மாநகராட்சி, 61வது வார்டு பீர்க்கன்காரணை காமராஜ் நகர் நகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளுடன் கூடிய தொட்டிகள் பராமரிப்பு இன்றி பழுதடைந்து கிடக்கிறது. தொட்டிகளையும், ஆழ்துளை கிணறுகளையும் மாநகராட்சி நிர்வாகம் சரி செய்து மக்களுக்கு தண்ணீர் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சிபிஎம் கோரியுள்ளது.