உளுந்தூர் பேட்டை,ஏப்.3- உளுந்தூர்பேட்டை புறவழி சாலையில் திடீரென பிரேக் போட்ட லாரியின் பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதி சம்பவஇடத்திலேயே உயிரிழந்தார் மற்றொரு நபர் படுகாயம் அடைந்தார் அவரை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சேர்த்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் யார்? என விசாரணை நடத்தி வரு கின்றனர்.