சென்னை, டிச.29- சென்னை ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்தில் மூன்று பிக்கில் பால் விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்பட உள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் டிச. 1 முதல் 3 ஆம் தேதி வரை நடை பெற உள்ள 7வது பிக்கில் பால் தேசிய விளையாட்டு போட்டி குறித்து சென்னை யில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாடு பிக்கிள் பால் சங்கத்தின் பொதுச் செயலாளர் மோகித் குமார்,எக்ஸ்பிரஸ் அவென்யூ நிர்வாகி கவிதா சிங்கானியா ஆகியோர் இதனை தெரிவித்தார். பிக்கில் பால் மேற்கத்திய நாடுகளில் அறி முகமாகி தற்போது இந்தியாவில் பரவலாக விளையாடப்படுகிறது. டென்னிஸ் மற்றும் பேட்மிட்டன் விளையாட்டுகளின் கலவை இது. அனைத்து வயதினரை ஈர்க்கும் இந்த விளையாட்டை, 2018 ஆம் ஆண்டின் புள்ளிவிபரப்படி, உலக அளவில் 30 லட்சம் பேர் விளையாடுகின்றனர். இந்தியாவில் கிட்டத்தட்ட 2000 பிக்கில் பால் விளையாட்டு வீரர்கள் உள்ளனர்.மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்தப் போட்டி, நோய் தொற்று காலத்தில், ஊரடங்கால் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்க ளுக்கு உற்சாகம் தரும் வகையில் சமூக இடைவெளியை கடைப்பிடித்து புதிய நுட்பத்துடன் விளையாடப்படுகிறது. தேசிய போட்டியில் பங்கேற்க உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் கொண்ட அணிக்கு எக்ஸ்பிரஸ் அவென்யூ ஸ்பான்சர் செய்வது குறிப்பிடத்தக்கது. தேசிய போட்டியில் தமிழக அணி வெற்றி பெற இந்த நிகழ்ச்சியில் கவிதா சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.