பிச்சாவரம் சுற்றுலா மையத்தில் ரூ. 14 கோடி செலவில் மேம்படுத்தப்படும் பணிகளை வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். கடலூர் மாவட்ட ஆட்சியர்பாலசுப்ரமணியம், சுற்றுலா அலுவலர் முத்துசாமி, சிதம்பரம் வட்டாட்சியர் செல்வக்குமார், திமுக பொதுக்குழுஉறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், கிள்ளை பேருராட்சித் தலைவர் மல்லிகா, பிச்சாவரம் சுற்றுலா மைய மேலாளர் தினேஷ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.