மோட்டார் வாகன சட்டம் 2019, பாரதிய நியாய ஷன்ஹிதா சட்டம், பிரிவு 106(1)(2) சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஞாயிறன்று (மார்ச் 17) எழும்பூரில் ஓட்டுநர்கள் கையெழுத்து இயக்கம் நடத்தினர். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தை வழக்கறிஞர் கே. முருகன் தொடங்கி வைத்தார். மாவட்ட பொதுச் செயலாளர் எம். உதயகுமார், ஆட்டோ சங்க மாவட்ட தலைவர் ஆர்.கபாலி, பொதுச் செயலாளர் எஸ். பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.