districts

img

சிவதாண்டவ நாட்டியாலயாவின் பரதநாட்டியம் அரங்கேற்றம்

கடலூர், ஜன.13-  கடலூர் சிவதாண்டவ நாட்டியாலயா சார்பில், திருப்பாப்புலியூர் சலங்கை பூஜை மற்றும் அரங்கேற்ற விழா நடைபெற்றது.  நிகழ்ச்சியில் சிறப்பு  விருந்தினர்களாக கலந்து கொண்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கடலூர் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன், லீமா ஐயப்பன், டாக்டர் பிரவீன் ஐயப்பன், குடியிருப்போர் நல சங்க சிறப்புத் தலைவர் மு.மருது வாணன் மற்றும் அரு ணாச்சல பைப்ஸ் உரி மையாளர் ந.நாராயணசாமி ஆகியோர் தொடங்கி வைத்தனர். நடன ஆசிரியர் இர.ஞானசேகரன் வரவேற்றார். நடன நிகழ்ச்சி முடிந்ததும் கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பி னர் கோ.ஐயப்பன் மாண வர்களை பாராட்டி சான்றி தழ் வழங்கினார். பரதநாட்டிய மாணவி கள் எஸ்.சுபிக்ஷா, பி.தனிஷ்கா, ஆர்.தரணி ஸ்ரீ,  ஆர்.ஸ்ரீநிதி, வி.மோக் ஷிதா சாய், வி.கஜலட்சுமி, டி.அபர்ணா, ஆர்.திவ்யா, எம்.தன்வி, எம். தனுஸ்ரீ ஆகி யோரின் பரதநாட்டியம் அரங்கேற்றம் நடை பெற்றது. பெற்றோர்கள் சார்பாக ஆசிரியர் து.பத்மா வதி  நன்றி கூறினார்.