புதுதில்லி, ஜூன் 24-
மாநில அரசுகளிடம், உணவு தானி யங்களை விற்பனை செய்ய மறுத்த ஒன்றிய பாஜக அரசு, தற்போது 4 லட்சம் டன் கோதுமை, 5 லட்சம் டன் அரிசியை தனியார் மொத்த வியாபாரிகளுக்கு ஏலம் விடப்போவதாக அறிவித்துள் ளது.
வெளிச்சந்தையில், அரிசி, கோதுமை ஆகியவற்றின் சில்லரை விற்பனை விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காகவே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் ஒரு கார ணத்தைக் கண்டுபிடித்து மோடி அரசு கூறியுள்ளது.
இதுதொடர்பாக இந்திய உணவுக் கழகத் தலைவரும் நிர்வாக இயக்கு நருமான அசோக் கே மீனா கூறுகை யில், “விலை உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய தொகுப்பில் இருந்து 15 லட்சம் டன் கோதுமையை விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன் படி கோதுமைக்கான டெண்டர் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், 4 லட்சம் டன் கோதுமை விற்பனைக்கான முதல் சுற்று ஏலம் ஜூன் 28-ஆம் தேதி நடைபெறும். 5 லட்சம் டன் அரிசிக்கான ஏலம் ஜூலை 5-ஆம் தேதி நடைபெறும். ஒரு வியா பாரிக்கு அதிகபட்சமாக 100 டன் கோதுமை வழங்கப்படும்.
சிறிய வியா பாரிகளுக்கு 10 டன் வழங்கப்படும். கோதுமை 100 கிலோவின் விலை ரூ. 2 ஆயிரத்து 150 ஆகவும், அரிசி யின் விலை 100 கிலோவிற்கு ரூ. 3 ஆயி ரத்து 100 ஆகவும் நிர்ணயம் செய்யப் பட்டுள்ளது. உண்மையான வர்த்த கர்களை அடையாளம் காண எப்எஸ் எஸ்ஏஐ (FSSAI) உரிமமும் கட்டாய மாக்கப்பட்டுள்ளது.
தேவைப்பட்டால், திறந்த வெளிச் சந்தை விற்பனை திட்டம் மூலம் வெளி யிடுவதற்கு 87 லட்சம் டன் கோதுமை யும், 292 லட்சம் டன் அரிசியும் அரசி டம் கூடுதல் இருப்பு உள்ளது. உணவுச் சட்டங்களின்படி நாட்டின் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்களை அரசு இலவசமாக வழங்கி வரு கிறது. மீதமுள்ள 60 கோடி மக்களும் நியாயமான விலையில் உணவுத் தானி யங்கள் பெறுவதை திறந்த சந்தை விற்பனை திட்டம் உறுதிப்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட் டத்தின் கீழ், ஒன்றிய அரசு மாதம் தோறும் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ இலவச அரிசி வழங்கி வரு கின்றது. ஆனால், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வராத மக்களுக்கும் தமிழ்நாடு, கர்நாடகா, மேற்குவங்கம், தெலுங்கானா உள் ளிட்ட மாநிலங்கள் ரேசனில் இலவச மாக அரிசி, கோதுமை உள்ளிட்ட தானி யங்களை வழங்கி வருகின்றன.
இந்த இலவசத் திட்டங்களுக்கான தானி யத்தை ஒன்றிய அரசின் தொகுப்பிலி ருந்தே மாநில அரசுகள் விலைக்கு வாங்கி, வழங்கி வருகின்றன. இந்நிலையில், இந்திய உணவுக் கழகத்தின் கையிருப்பில் உள்ள அரிசி மற்றும் கோதுமை இனிமேல் மாநி லங்களுக்கு விற்பனை செய்யப்பட மாட்டாது என்று நரேந்திர மோடி தலை மையிலான ஒன்றிய பாஜக அரசு கடந்த ஜூன் 13 அன்று அறிவித்தது. இடைத்தரகர்களால் ஏற்படும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தும் நோக்கிலும், தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறிக் கொண்டது.
ஆனால், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், மக்களுக்கு உணவுப் பொருட்கள் இலவசமாக வழங்கப்படு வதைத் தடுப்பதற்காகவே, இப்படி யொரு முடிவை மோடி அரசு எடுத்துள் ளதாக அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், மாநில அரசு களுக்கு அரிசி, கோதுமையை விநி யோகிக்க மாட்டோம்; அதேநேரத்தில் மொத்த வியாபாரிகளுக்கு 4 லட்சம் டன் கோதுமையையும், 5 லட்சம் டன் அரிசியையும் விற்பனை செய்யப் போவதாக மோடி அரசு அறிவித்தி ருப்பது, அதன் நோக்கத்தை வெளிச் சம் போட்டுக் காட்டியுள்ளது. எதிர்க் கட்சிகளின் குற்றச்சாட்டையும் உண்மையாக்கி இருக்கிறது. அண்மையில் கர்நாடகத்தில் வெற்றிபெற்ற காங்கிரஸ் அன்ன பாக்யா திட்டத்தின்கீழ் ஏழைகளுக்கு மாதந்தோறும் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்கப்படும் என்று கூறி யிருந்தது.
இதற்கான அரிசியை ஒன் றிய அரசிடம் கேட்டிருந்தது. அப்போது தான், இனிமேல் மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனையே கிடை யாது என்று அறிவித்தது.
இதனால், கர்நாடகத்தில் ஜூலை 1 முதல் வரு வதாக இருந்த அன்னபாக்யா திட் டத்தை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தேர்ந் தெடுக்கப்பட்ட மாநில அரசு கேட்ட அரி சியைத் தர மறுத்துவிட்ட நரேந்திர மோடி அரசு வணிகர்களுக்கு பல லட்சம் டன் அரிசி, கோதுமையை விற் பனை செய்யப்போவதாக அறிவித்து நாட்டு மக்களை வஞ்சித்துள்ளது.