districts

img

பெத்தேல் நகர் பகுதி குடியிருப்புகள் ஆய்வு

சென்னை மாநகராட்சி ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் பகுதி குடியிருப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் திங்களன்று (மார்ச் 21) அந்தப் பகுதியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் நாகை மாலி, எம்.சின்னதுரை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், சோழிங்கநல்லூர் பகுதிச் செயலாளர் ஜெயவேல், பெத்தேல்  நகர் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகள் சு.கா.விடுதலை செழியன், பா.நாராயணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.