districts

img

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தாட்கோ திட்டத்தால் பயனடைந்த பயனாளிகள்

கள்ளக்குறிச்சி, ஆக. 30 - கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் தாட்கோ திட்டத்தின் மூலம் பயன் பெற்ற பயனாளிகள் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு முதலமைச்சருக்கு  நன்றி தெரிவித்தனர். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழகத்தின் மூலமாக நன்னிலம் மகளிர் தின உடைமை திட்டத்தின்  மூலம் கடனுதவி பெற்ற சங்கராபுரம் வட்டம்,பிரிவுடையாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த செல்வி என்பவர் தெரிவிக்கையில், நான் சங்கராபுரம் வட்டம் பிரிவுடையாம் பட்டு கிராமத்தில் வசித்து வருகிறேன். நானும்  எனது கணவரும் விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எனக்கு சொந்த வீட்டில்  வாழ வேண்டும் என நீண்ட நாள் ஆசை.அதற்கென காசு சேர்த்து வைத்தேன்.ஆனால்  அந்த காசு நிலம் வாங்குவதற்கு கூட போதுமானதாக இல்லை அப்போதுதான் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் மூலமாக நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டத்தின் மூலம் விவசாய தொழிலாளர்களை ஊக்குவித்திடும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியி னர் வகுப்பினை சார்ந்தவர்களுக்கு  விவசாய நிலம் வாங்குவதற்கு தாட்கோ மானியத்துடன் கிரையத்   தொகையினை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் குறைந்த வட்டியில் கடனாக பெற்று வழங்கப்படுவது குறித்து அறிந்தேன்.  எனவே இத்திட்டத்தின்கீழ் ரூ.15லட்சம் கடனுதவி கேட்டு விண்ணப்பித்தேன். எனது விண்ணப்பம் பரிசீலனை செய்யப்பட்டு, ரூ.5லட்சம்  அரசு மானியத்துடன் எனக்கு கடனுதவி வழங்கப்பட்டது.இதன் மூலம் 1.36 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.எனது  மனம் நிறைவடைந்தது. நிறைந்த மனதுடன் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த பயனாளி கூறியுள்ளார்.