மதுராந்தகம், மார்ச் 14- மதுராந்தகம் நகராட்சி 12வது வார்டு மோச்சேரி செல்லும் சாலை திருவிக நகரில் மதுராந்தகம் ஏரி அமைந்திருக்கும் சர்வே எண்ணில் நூற்றுக்கணக் கான குடும்பங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக வீடுகள் கட்டி வசித்து வருகின்றனர். இவர்கள் ஆக்கிர மிப்பாளர்கள் என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒருவர் தொடுத்த வழக்கில் மதுராந்த கம் ஏரியில் உள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டது. இதனைத் தொடர்ந்து 300க்கும் மேற்பட்ட குடும் பத்தினர் மார்ச் 15ம் தேதிக்குள் காலி செய்திட வேண்டுமென வருவாய்த் துறை சார்பில் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் மதுராந்தகம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் வீட்டுமனை வழங்கி வீடுகளைக் கட்டித்தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் வருவாய்த் துறை யின் சார்பில் மதுராந்தகம் நகராட்சிக்கு தொடர்பே இல்லாத கிராமப்புறங் களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. பாதிக்கப்பட்டுள்ள அப்பகுதி மக்களுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பி னர் பி.மாசிலாமணி, இவர்க ளுக்கு மதுராந்தகம் நகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதியில் மாற்று இடத்தை வழங்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்றார்.