districts

img

சைதாப்பேட்டையில் அடிப்படை வசதிகள் இல்லாத காப்பீட்டு திட்ட பதிவு அலுவலகம்

சென்னை,பிப்.5- சென்னை, சைதாப்பேட்டை பழைய மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் விரிவாக்கப்பட்ட முதலமைச்சர் காப்பீட்டு திட்ட பதிவு மையம் கடந்த ஜன. 12 அன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தால் தொடங்கி வைக்கப்பட்டது. சைதாப்பேட்டை தொகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்க ளுக்கு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்ய,  சைதாப்பேட்டை மண்டல அலு வலத்திற்கு வந்துச் செல்கின்றனர். சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் மட்டும் நடைபெற்று வந்த இந்த பணி தற்போது கொரோனா காலத்தில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் பல இடங்களில்  தொடங்கப்பட்டாலும் கூட்டம் குறைந்தபாடில்லை.  

இந்த மையத்தில் ஒரே ஒரு பணியாளர்  மட்டுமே இருப்ப தால் அரசின் நோக்கம் முழுமை யாக நிறைவேறுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஒரே ஒரு பணியாளர் கடும் பணிச்சுமைக்கு இடையே பணியாற்றுகிறார். ஒரே ஒரு பணியாளர் என்பதால் பதிவு செய்ய மக்கள் நீண்டநேரம் காத்தி ருக்கவேண்டியுள்ளது.  முறையாக  பராமரிப்பின்றி இருக்கும்  அந்த மாநகராட்சி கட்டத்தில் அவுட்சோர்சிங் மூலம் செய்யப்படும் இந்த பணிக்கு மிக சொற்ப ஊதியமே வழங்கப்படுவதாகவும் ஊழியர்க ளுக்கு பணிப்பாதுகாப்பு இல்லாத நிலையும் உள்ளதாக கூறப்படுகிறது.  கூடுதலாக ஊழியர்கள் பணியமர்த்த படாமல் இருப்பது,  போதிய வெளிச்சம் இன்மை, சுகாதாரமற்ற கழிப்பறை, ஓய்வறை இன்மை இவைகளால் ஊழியர்களுக்கு பணிச் சோர்வை அதிகரிக்கும்.   மருத்துவ காப்பீட்டு பதிவின் போது வெப் கேமராவில் எடுக்கப்படும் நிழற்படத்தில் பய னாளர்களின் முகம் தெளிவாக இல்லை.  மேஜை, நாற்காலிகள், சுத்த மான குடிநீர் பொதுமக்கள் அமர்வதற்கு இருக்கை ஏற்பாடுகள் கூட இல்லை.  இதனால் கை குழந்தைகளுடன் வரும் பெண்கள் பெரும் அவதிப்படுகின்றனர். எனவே சைதாப்பேட்டை மையத்தில் போதிய அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து தருவதோடு கூடு தலாக ஊழியர்களை நியமித்தால் பொது மக்கள் காப்பீட்டு பதிவை விரைந்து முடித்து வீடு திரும்ப முடியும்.