செங்கல்பட்டு, ஜூலை 17-
சென்னை அருகே மாமல்லபுரத்தில் மகளிர் ஜி 20 உச்சி மாநாடு 2 நாட்கள் நடைபெற்று நிறைவடைந்துள்ளது. இந்த மாநாட்டில் பிரான்ஸ், இத்தாலி, இங்கிலாந்து இந்தோனேசியா, ஆஸ்தி ரேலியா, தென் கொரியா, வடகொரியா, அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, நார்வே, டென்மார்க் உள்ளிட்ட 18 நாடு களை சேர்ந்த பெண் பிரதி நிதிகள் 150 பேர் பங்கேற்ற னர்.
மாநாட்டின் நிறைவு நாளான வெள்ளியன்று (ஜூன் 16) வெளிநாட்டு விருந்தினர்களை தமிழர் பண்பாட்டின் திருமண விருந்தில் பந்தி பரிமாறு வது போல, வடை, பாயசத்து டன் வாழை இலை விருந்து வைக்க ஒன்றிய அரசின் சுற்றுலா மற்றும் கலாச்சார துறை அமைச்சகம் முடிவு செய்தது.
அதன்படி மகளிர் ஜி 20 மாநாடு முடிந்தவுடன் வெளிநாட்டு பெண் பரதிநிதி களுக்கு வாழையில் உணவு பரிமாறப்பட்டன. நட்சத்திர ஓட்டலின் உணவு கூட ஊழி யர்கள் தமிழர்களின் பாரம்பரிய பட்டு வேட்டி, சட்டை அணிந்து விருந்து பரிமாறினர்.