சென்னை, ஜூன் 9-
வங்கியின் சேவைகளை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெறும் வகையில், மகாராஷ்டிரா வங்கி சென் னையில் வாடிக்கையாளர்களை அணு கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந் தது.
இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியை சேர்ந்த வாடிக்கை யாளர்கள் மற்றும் வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். மகாராஷ்டிரா வங்கியின் செயல்பாடுகளை இயக்கு நர் ஆஷீஷ் பாண்டே இதில் விளக்கிப் பேசினார். வருடாந்திர வளர்ச்சி மற்றும் வங்கியின் எதிர்கால வளர்ச்சி குறித்து வாடிக்கையாளர்களுக்கு அவர் விளக்கினார்.
அவர் மேலும் கூறுகையில், 2023 மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நிதி யாண்டில், வாராக்கடன் 0.25 விழுக்காடு குறைந்துள்ளது என்றார். மோசமான கடன்களை குறைப்பதில் மகாராஷ்டிரா வங்கி சிறந்த வங்கி யாக உருவெடுத்துள்ளது என்றும் அவர்கூறினார். மகாராஷ்டிரா வங்கி யின் லாபம் இந்த ஆண்டில் 126 விழுக் காடு அதிகரித்து ரூ.2,602 கோடியாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார்.