districts

பல்லக்குமா நகர் வாரிய குடியிருப்பு பராமரிக்க நிதி ஒதுக்கப்படும் வாரிய இயக்குநர் உறுதி

சென்னை, ஜூன் 21 -

    பல்லக்குமாநகர் கபாலி தோட்டம் வாரிய குடியிருப்பு பகுதியில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களிடம், வாரிய மேலாண் இயக்குநர் உறுதி அளித்துள்ளார்.

    மயிலாப்பூர் பகுதி, 123வது வட்டம் பல்லக்குமாநகர் கபாலி தோட்டத்தில் உள்ள வாரிய குடியிருப்புகள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. குடியிருப்புகளின் இருபுறமும் கழிவுநீர் நீண்ட காலமாக தேங்கி நிற்கிறது. குறிப்பாக, கழிவுநீர் குழாயில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுகள் வழிந்தோடுவதால் தொற்று நோய் ஏற்பட்டு மக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகின்றனர்.

    அடுக்குமாடி குடியிருப்புகளில் மேல் தளம், படிக்கட்டுகளும் இடிந்து விழுந்து வருகின்றன. இதுகுறித்து வாரிய அதிகாரிகளிடம் தெரிவித்தபோது, போதிய நிதி ஒதுக்கீடு இல்லாததால், கழிவுநீர் இணைப்பு குழாய்களை மாற்ற முடியவில்லை. பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியவில்லை என்று தெரி விக்கின்றனர்.

    எனவே, அடிப்படை பிரச்சனைகளை சரி செய்ய நிதி ஒதுக்க வலியுறுத்தி வாரிய மேலாண்மை இயக்குநர் சங்கரை செவ்வாயன்று (ஜூன் 20) மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். குமார், 123 வார்டு கவுன்சிலர் எம்.சரஸ்வதி பகுதி குழு உறுப்பினர்கள் ஆர். ரமேஷ், பல்லக்குமாநகர் கிளை செயலாளர் க. மாரிமுத்து உள்ளிட்டோர் சந்தித்து மனு அளித்து பேசினர். இதற்கு பதிலளித்த மேலாண் இயக்குநர் பல்லக்குமாநகர் பகுதிக்கு நிதி ஒதுக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.