districts

img

பெண்களுக்கு எதிரான பாஜக ஆட்சியை இந்தியா கூட்டணி முறியடிக்கும்

திருவள்ளூர், அக் 15- பெண்களுக்கு எதிரான பாஜக ஆட்சியை இந்தியா கூட்டணி முறியடிக்கும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பால பாரதி தெரிவித்தார். பெண்களுக்கான 33 விழுக்காடு  இட ஒதுக்கீடு மசோதாவை வரும் நாடாளுமன்ற தேர்தலிலேயே நடைமுறை படுத்த வேண்டும், போக்சோ நீதிமன்றங்களில் உள்ள வழக்குகளை விரைந்து முடித்திட சிறப்பு நீதிமன்றங்களை அதிகரிக்க வேண்டும், சாதி ஆணவ படு கொலையை தடுக்க சிறந்த சட்டம் கொண்டு வரவேண்டும்,  குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையை தடுத்திட வேண்டும், உள்ளாட்சியில் தேர்வு செய்த பெண் பிரதி நிதிகள் சுதந்திரமாக செயல்படும் சூழலை உருவாக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெண்ணுரிமை பாதுகாப்பு கருத்தரங்கம் சனிக்கிழமையன்று  (அக் 14), தாமரைப் பாக்கம் கூட்டுச் சாலையில் நடைபெற்றது. ஊத்துக்கோட்டை வட்டச் செயலாளர் ஏ.ஜி.கண்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் பாலபாரதி பேசுகையில்.   நூறு நாள் வேலை 15 நாட்கள் வேலையாக மாறி விட்டது. இதிலும் சம்பள பாக்கி 6 மாதமாக உள்ளது. இந்த திட்டத்தில் பெண்கள் வேலை செய்வதில்லை, இந்த திட்டம் தேவையில்லை என சிலர்  கூறுகின்றனர். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் 62 பேர் இருக்கும் போது,  நூறு நாள் வேலை என்ற மகத்தான திட்டத்தை கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி கொண்டு வரப்பட்டது. வேலை இல்லை, வருமானம் இல்லாத தால், பட்டினி சாவை யும், தற்கொலையை தடுப்பதற்கு ஊதியம் கொடுக்க வேண்டும், அந்த ஊதியத்திற்கு வேலை கொடுக்க வேண்டும் இது தான் சட்டம் சொல்கிறது. ஆனால் மோடி அரசு 2 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்க வேண்டிய இடத்தில், வெறும் 60 ஆயிரம் கோடி ரூபாயாக சுருக்கி யுள்ளது. இந்த வேலையை முடக்க நினைக்கிறது.விலைவாசி உயர்வால் போது மான சத்துணவு கிடைக்காமல் பெண்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

பெண்கள் அடிமையாக இருக்க வேண்டும் என்ற தத்துவத்தை உடைத்து இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் டாக்டர் முத்துலட்சுமி புதுக்கோட்டையில் ஆண்களுடன் இணைந்து முதல் முதலாக கல்லூரிக்கு சென்று படிக்க ஆரம்பித்தார்.பெண் கல்வி துவங்கிய இடமாக தமிழ்நாடு இருந்தது.  முதல் சட்ட மன்ற உறுப்பினராக டாக்டர் முத்து லட்சுமி இருந்தார். மநுஸ்மிருதியை எதிர்த்து சீர்திருத்த கருத்துக்களை கொண்ட தலைவர்களின் ஒன்றுபட்ட போராட்டங்களின் விளைவாக பெண்கள் கல்வி கற்கவும், சட்டமன்றம் செல்லவும் முடிந்தது. இது நடக்காமல் போயிருந்தால் நிர்மலா சீதாராமன் போன்றவர்கள் அமைச்சராக இருந்திருக்கமுடியாது. கைநாட்டாக இருந்திருப்பார்கள். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 2022 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியா முழுவதும் பெண்களுக்கு 29 ஆயிரத்து 181 பாலியல் குற்றங்கள் நடைபெற்றுள்ளது.20 ஆயிரம் துன்புறுத்தல் போன்ற குற்றங்கள் நடை பெற்றுள்ளது. இப்படி பெண்களுக்கு எதிரான மோடி பாஜக அரசை தூக்கி எறிவோம் இவ்வாறு பேசினார். கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் டி.பன்னீர்செல்வம், ஜி.சம்பத், இ.மோகனா, மாவட்ட குழு உறுப்பினர் பி.பத்மா, ஆகியோர் பேசினர்.கிளை செய லாளர் எஸ்.புஷ்பா நன்றி கூறினார்.இதில் மாதர் சங்கத்தின் நிர்வாகிகள் கே.ரமா, ஆர்.சித்ரா, எஸ்.ரம்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.