districts

img

கால்வாயில் தேங்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் துர்நாற்றம்

விழுப்புரம், ஏப்.26- விழுப்புரம் நகரில் இருந்து செல்லும் கோலிய னுாரான் வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைத்து கொள்வ தால் கழிவுநீர் செல்ல வழி யின்றி தேங்கி துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாய மும் இருக்கிறது என பொது மக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளின் குடி யிருப்பு பகுதிகளில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். மேலும் வணிக நிறுவனங்கள், மருத்துவமனைகள் என பல்வேறு தொழில் நிறைந்த நகரமாகவும் விழுப்புரம் உள்ளது. இந்நிலையில் இந்த குடியிருப்பு பகுதி கள் மட்டுமின்றி வணிக நிறு வனங்கள், மருத்துவ மனைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் அனைத்தும் விழுப்புரம் நகரில் உள்ள பல்வேறு கால்வாய்கள் வழியாக சென்று கோலியனூரில் உள்ள கோலியனூரான் என்ற பெயர் கொண்ட பெரிய கால்வாயில் கலந்து சென்று சேருகிறது. கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு, கோலிய னூரான் கால்வா யில் கழிவுநீர் செல்ல வழியின்றி தண்ணீர் தேங்கு வதால், சுகாதார கேடு ஏற்படுவதாக அப்போது மக்கள் குற்றச் சாட்டையடுத்து கோடி கணக்கில் பணம் செல வழித்து சீரமைப்பு பணிகள் நடைபெற்றது. நகரத்தில் நகராட்சி சார்பில் புதிய பெரிய கால்வாய்கள் கட்டப்பட்டு, கழிவுநீர் தடையின்றி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டது. துவக்கத்தில் இந்த கால்வாய்கள் நக ராட்சி ஊழியர்கள் கண்காணிப்பில் நல்ல நிலையில் இருந்தாலும், காலப்போக்கில் பரா மரிப்பின்றி மீண்டும் கோலி யனூரான் கால்வாய் பல இடங்களில் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு அடைப்பு ஏற்படுகிறது. இத னால் கழிவுநீர் வெளியேற முடியாமல் ஆங்காங்கே தேங்கி விடுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது என பொதுமக்கள் அச்சம் தெரி வித்துள்ளனர். அதனால் பொதுப் பணித்துறை, நகராட்சி ஊழியர்கள் இந்த கோலிய னூரான் வாய்க்காலை சீரமைத்து, மீண்டும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டாமல் இருக்க கண்காணிப்பு பணிகளில் ஈடுபட வேண்டும், மழை காலம் வருவதற்கு முன்பே, இந்த கோடைகாலத்தில் அதிகாரிகள் மற்றும் நகராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.