districts

img

முப்போகம் விளையக்கூடிய நிலங்களை எடுத்து அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை கைவிடுக

திருவள்ளூர், ஆக.28- விளைநிலங்களை கையகப்படுத்தி அறிவுசார் நகரம் அமைக்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என முதலமைச்சரை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார். திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையத்தில் ஞாயிறன்று (ஆக-27),  தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மண், மனிதன், மாடு, வீடு, வாழ்வு ரிமை பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. டிட்கோ நிறுவனம் சார்பில் ஊத்துக் கோட்டை வட்டத்திற்குட் பட்ட கல்பட்டு, ஏனம்பாக்கம், மேல்மாளிகைபட்டு, செங்காத்தாகுளம், எர்ணாங்குப்பம், வெங்கல் ஆகிய கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டு வருகிறது.  முப்போகம் விளையக் கூடிய ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களை  எடுப்பதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறி யாகும் நிலை ஏற்பட்டுள் ளது. இதனை தடுக்கும் பொருட்டு வாழ்வுரிமை பாது காப்பு மாநாடு நடை பெற்றது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் பெ.சண்மு கம் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகளை  கேட்டறிந்த பின்னர் பேசுகை யில், அறிவுசார் நகரம் அமைக்க பெரியபாளையம் பகுதியில் 1200 ஏக்கர் பரப் பளவில் விவசாயிகளுக்கு சொந்தமான நெல், சிறுதானி யங்கள் விளைய கூடிய நிலம் கையகப்படுத்த அரசாணை பிறப்பித் துள்ளது. இதனால் விவசாயி கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டுள்ளது. இது ஆபத்து போக்கு  விவசாயிகளின் வாழ்வா தாரத்தை பறித்து புதிய  திட்டங்களை நிறைவேற்று வது கண்டிக்கத்தக்கது. தமிழ்நாட்டில் வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் விவசாயிகள் சம்மதம் இல்லாமல் நிலங்களை கையகப்படுத்தும் போக்கு  அதிகரித்து வருகிறது. திமுக தேர்தல் அறிக்கை யில் விவசாயிகள் சம்மதம்  இல்லாமல் நிலம் கையகப் படுத்தப்படாது என அறிவித்த நிலையில்,  தற்போது அதற்கு மாறாக நிலத்தை கையகப்படுத்தும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. 

2013ஆம் நிலம் கையகப் படுத்தும் சட்டத்தை பயன் படுத்துவதை விட்டுவிட்டு அதற்கு முந்தைய பழைய  சட்டங்களை பயன்படுத்தி நிலத்தை கையகப்படுத்து வது என்பது  விவசாயி களுக்கு மிகப்பெரிய பாதிப்பையும், நியாயமான இழப்பீடு கிடைக்காமல் மறுவாழ்வு கிடைக்க வாய்ப்பில்லாத சூழல் ஏற்படும். பழைய சட்டங்கள் எல்லாம் விவசாயிகளின் நில உரிமையை அங்கி கரிக்க மறுக்கிறது என்ற காரணத்தால் தான் 2013 ஆம்  ஆண்டு நிலம் கையகப் படுத்துதல், நியாயமான இழப்பீடு மறு வாழ்வு மற்றும்  மறுகுடியேற்றம் என்ற ஒரு  புதிய சட்டம்  நாடாளு மன்றத்தில் நிறைவேற்றப் பட்டது. இந்த சட்டம் வந்த  பிறகும், பழைய சட்டங் களை பயன்படுத்தி மாநில அரசாங்கங்கள் நிலத்தை கையகப்படுத்துவது என்பது நில உரிமையை பறிக்க கூடிய செயலாகும். அறிவுசார் நகரத்தை பொறுத்தவரையில் தமிழ்நாடு அரசு தனது முடிவை கைவிட வேண்டும். விளை நிலங்களை கைய கப்படுத்துவதை தவிர்த்து, விவசாயத்திற்கு லாயக் கற்ற தரிசு நிலங்களில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வேண்டும். உணவு பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் நெல் விளையக் கூடிய இடத்தில் இந்த  திட்டத்தை செயல்படுத் துவது அறிவுடைய செய லாக இருக்காது. விவசாயி களின் நில உரிமையை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்த திட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றார். அக் 3  ஆட்சியரிடம் மனு  அறிவுசார் திட்டத்திற்கு முப்போகம் விளையக் கூடிய விவசாய நிலங்களை வழங்க எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளும் அக் 3  அன்று திருவள்ளூர் மாவட்ட  ஆட்சியரிடம்  மனுக்களை கொடுக்க இந்த மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. மாநாட்டிற்கு விவசாயி கள் சங்கத்தின் வட்டத்  தலைவர் டி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.சங்கத்தின் மாநில செய லாளர் பி.துளசிநாராயணன், மாவட்ட செயலாளர் ஜி.சம்பத், மாவட்ட துணைத்  தலைவர் பி.ரவி (ஒன்றிய கவுன்சிலர்), முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ஏ.ஜி. கண்ணன், மற்றும் விவசாயி கள் பேசினர்.