வாகன ஓட்டுநர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி
அம்பத்தூர், செப். 7- ஆவடி அடுத்த பட்டாபிராம் சரகப் போக்குவரத்து காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கனரக வாகன ஓட்டுநர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி பட்டாபிராமில் நடைபெற்றது. காவல் உதவி ஆணையர் கனகராஜ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி பேசிய அவர் பின்னால் வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு செல்ல வேண்டும். பள்ளி மாண வர்களை ஏற்றி கொண்டு செல்லும் போது மிகவும் கவனமாக ஓட்ட வேண்டும் என்றார். இதில், பட்டாபிராம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பாபு, உதவி ஆய்வா ளர் ராமசாமி, எழுத்தர் சூசைநாதன் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டு நர்கள், பள்ளி வாகன ஓட்டுநர்கள் என 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குடியிருப்பில் தீ விபத்து: 2 குழந்தைகள் பலி
சென்னை, செப்.7- திருத்தணி அடுத்த தாழவேடு காலனியை சேர்ந்தவர் பிரேம்குமார் (32). அவரது மனைவி மஞ்சுளா (30). தம்பதிக்கு மிதுலன் (2), கபிலன் (1) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ள னர். இவர்கள், திருத்தணி முருகப்பா நகரில் உள்ள மகேந்தி ரன் என்பவர் அடுக்குமாடி வீட்டின் மேல் தளத்தில் வாட கைக்கு வசித்து வந்தனர். வியாழக்கிழமை (செப்.5) நள்ளிரவு 1 மணிக்கு வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனம் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்ததால், வீட்டை கரும்புகை சூழ்ந்தது. இதனால், மூச்சு திணறல் ஏற்பட்டு பிரேம்குமார் அவரது மனைவி குழந்தைகளுடன் தப்பிக்க படிக்கட்டு வழியாக கீழே இறங்கி வந்த போது 4 பேரும் தீயில் சிக்கினர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு, திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சை க்காக, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்க ப்பட்ட நபிலன், மிதுலன் ஆகிய 2 குழந்தைகளும் சிகிச்சை பலனின்றி இறந்தனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட மஞ்சுளா, பிரேம்குமார் 80 விழுக்காடு காயங்களுடன் உயிருக்கு போராடி வருகின்ற னர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
சென்னை விமான நிலைய வளாகத்தில் மது, புகையிலைக்கு தடை
சென்னை, செப்.7- சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறை அலுவலக வளாகம் மற்றும் கார்கோ பிரிவில் சுங்கத்துறை பணியாளர்கள் சிலர் சமீப காலங்களாக புகையிலைப் பொருட்கள் பயன்படுத்தப் படுவதாகவும், ஆங்காங்கே எச்சில்கள் உமிழ்ந்து, சுற்றுப்புற சூழ்நிலையை பாதிக்கும் விதத்தில் செயல்படுவதாகவும், சுங்கத்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து ஆய்வு செய்த போது அப் பகுதியில் மது மற்றும் புகையிலை அதிக அளவு பயன்படுத்தப்படுவது தெரிய வந்தது. மேலும் அலுவலக வளாகத்திற்குள் இது போல் பயன்படுத்துவதால், அதனால் பல்வேறு நோய் தொற்று கிருமிகள் பரவி, அனைவருக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். அரசு ஊழியர்கள் பணி நேரத்தின் போது, நடத்தை விதிமுறைகளை மீறி செயல்பட் டால், அவர்கள் மீது கடுமையான நடவடிக் கைகள் எடுப்பதற்கான, சட்ட விதிமுறை கள், 1984 ஆண்டில், ஒழுங்கு நடவடிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு இவைகளை கண்காணிப்பு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இதுதவிர அலுவலக வளா கங்களில் பணி நேரங்களில் புகை பிடிப்ப தும் தண்டனைக்குரிய குற்றமாக, 2008ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. எனவே விமான நிலைய சுங்கத்துறை அலுவலகம், விமான நிலைய வளாகத்திற்குள் உள்ள ஏர் கார்கோ அலுவலகங்களில், பணியாற்று பவர்கள் இதை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என சுங்கத்துறை ஆணையர் எச்சரித்துள்ளார்.
செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் திறப்பு
திருவண்ணாமலை, செப்.7- கொழப்பலூர் - விநாயகபுரம் சாலையில் செய்யாற்றின் குறுக்கே ரூ. 8.47 கோடியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தை பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, “இந்த பாலத்தின் மூலம் 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயனடைகின்றனர். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை எடுத்துச் செல்லவும், பள்ளிக்குச் செல்கின்ற மாணவர்களுக்கும் இப்பாலம் பேருதவியாக இருக்கும்” என்றார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், மக்களவை உறுப்பி னர்கள் எம்.எஸ்.தரணிவேந்தன் (ஆரணி), சி.என்.அண்ணாதுரை (திருவண்ணாமலை), சட்டமன்ற உறுப்பினர்கள் மு.பெ.கிரி (செங்கம்), எஸ்.அம்பேத்குமார் (வந்தவாசி), ஓ.ஜோதி (செய்யாறு), மாநில தடகள சங்கத் துணைத் தலைவர் எ.வ.வே.கம்பன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பார்வதி சீனி வாசன், செய்யாறு சார் ஆட்சியர் பல்லவி வர்மா, திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) மணி, பெரணமல்லூர் ஒன்றிய குழு தலைவர் இந்திரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தேடுதல் வேட்டையில் ரவுடியின் கை, கால் முறிந்தது
கடலூர், செப்.7 - புதுச்சேரியைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி அய்யனார். இவர் கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ந்து கொலை, கொள்ளை, வெடிகுண்டு வீச்சு போன்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்தார். கடலூர் ரெட்டிசாவடி பகுதியில் பதுங்கி இருந்த அவரை காவல்துறையினர் சுற்றி வளைத்ததாகவும், அப்போது, தப்பிக்க முயன்று பாலத்தில் இருந்து கீழே குதித்த தாகவும், அதில் அவருடைய வலது கை, இடதுகால் முறிந்த தாகவும், அவரிடம் இருந்து ஒரு கிலோ கஞ்சாவை காவல்துறையினர் கைப் பற்றியதாகவும் கூறப்படு கிறது. அதன் பிறகு கடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு சிகிச்சை பெற்று வரு கிறார். இதனை தொடர்ந்து ரவுடி அய்யனாரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு
கடலூர், செப்.7 - கடலூர் மாவட்டம், பண்ருட்டி அடுத்த நத்தம் நடுத் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். அவரது மகன் பிரசன்னா (வயது 7) சனிக்கிழமையன்று (செப்.7) காலையில் விளை யாடச் சென்றவர் காலை உணவுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர்கள் தேடி பார்த்தபோது, ஏரி நீரில் மூழ்கியவாறு உடல் மீட்கப்பட்டது. குழந்தையை பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரி வித்தனர்.இந்த சம்பவம் குறித்து புதுப்பேட்டை காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு உளவியல் ஆலோசனை மையம்
கிருஷ்ணகிரி, செப்.7 - கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவர்களிடம் மன அழுத்தத்தை குறைக்க சிறப்பு உளவியல் ஆலோசனை மையங்கள் அமைக்க பன்னோக்கு சிறப்பு குழு பரிந்துரை செய்துள்ளது. கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவி களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்ட பன்நோக்கு சிறப்பு குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறப்பு குழு சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவிகள், அவர்களுடைய பெற்றோர்கள், ஆசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கியது. பாதிப்பில் இருந்து விரைந்து மீண்டுவர அனைத்து நட வடிக்கையும் எடுத்து வருகிறது. போலி என்சிசி முகாம் நடத்தப்பட்டதாக கூறப்படும் பிற பள்ளிகளுக்கு சென்று அங்கு பல்வேறு உளவியல் ஆலோ சனைகள் வழங்கப்பட்டது. குறிப்பாக, போக்சோ குற்றங் களை எப்படி புகார் தருவது, ஆசிரியர்கள் அதை எப்படி கையாள்வது உள்ளிட்ட ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மன அழுத்தம் உள்ளதா என கண்டறியப்பட்டது. மாணவர்கள் எதிர்கால பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களை தடுக்கும் வகையில் நடை முறைகள் உருவாக்க சிறப்பு குழு அரசுக்கு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்ட பள்ளியை நிர்வகிக்க சிறப்பு அதிகாரி நியமிக்க தனியார் பள்ளி கல்வி இயக்குனருக்கு பரிந்துரை அளிக்கப் பட்டுள்ளது. அந்த பரிந்துரை தீவிர பரிசீலனையில் உள்ள தாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, வழக்கை செப்.12 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.