நாட்டைக் காப்போம் கூட்டமைப்பு சார்பில், இந்திய அரசமைப்பு சட்ட பாதுகாப்பு விழிப்புணர்வு பரப்புரை கலைப் பயணக்குழுவிற்கு புதனன்று (அக்.4) ஆலந்தூரில் வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழக மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பாளர் க.உதயக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.குமார், ஆலந்தூர் பகுதி பொறுப்பாளர் எஸ்.அரிகிருஷ்ணன், சிபிஎம் ஆலந்தூர் பகுதிச் செயலாளர் என்.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். தாம்பரத்தில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் சிபிஎம் தாம்பரம் பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா பேசினார்.