அரசு பள்ளிகளில் 2023-24 ஆண்டுக்கான புதிய மாணவர்கள் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு வாகனத்தை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் வளர்மதி சோளிங்கர் அடுத்த கொடைக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொடியசைத்து துவக்கி வைத்தார். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உஷா, கல்வி அலுவலர் பிரேமலதா, உதவி திட்ட அலுவலர் துறைவேல், வட்டார கல்வி அலுவலர் சிவராமன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளையராஜா, முனியாண்டி, மேற்பார்வையாளர் முருகேசன், தலைமை ஆசிரியர் ரங்கநாயகி, ஒன்றிய கருத்தாளர் ஆர்.திலகா, ஊராட்சி மன்றத் தலைவர் ஹேமச்சந்திரன், ஊராட்சி குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.