சென்னை, மே 13
முன்னணி சந்தை ஆராய்ச்சி நிறுவனமான தி பிசினஸ் மின்ட், 45-வது தேசிய அளவிலான விருது வழங்கும் விழாவை சென்னையில் நடத்தியது.
300 பிரதிநிதிகள் மற்றும் 100 பங்கேற்பாளர்களுடன் இவ்விழா சிறப்பாக நடைபெற்றது. சென்னை விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர ராஜா, நடிகர் நிதின் சத்யா ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கினர்.
சுகாதாரம், ரியல் எஸ்டேட், ஹோட்டல், ஃபின்டெக், ஐடி, வடிவமைப்பு-கட்டிடக்கலை, மார்க்கெட்டிங், இ-காமர்ஸ், கல்வி மற்றும் பல துறைகளில் இருந்து விருதுகளுக்கான பரிந்துரைகள் வந்தன. பெறப்பட்ட விண்ணப்பங்களை பிசினஸ் மின்ட் நிறுவனம் , சிறப்பு வல்லுநர்கள் குழுவை கொண்டு பல்வேறு பிரிவுகளில் பகுப்பாய்வுகளை நடத்தி சிறந்த நிறுவனங்களை தேசிய அளவிலான விருதுகளுக்கு தேர்வு செய்தது.