திருவள்ளூர், மார்ச் 6- திருவள்ளூர் மாவட்டத் தில் சிறப்பாக செயல்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு அறிஞர் அண்ணா தலை மைத்துவ விருதை பள்ளி கல்வித்துறை வழங்கியது. அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி களில் 2022-23 ஆம் ஆண்டிற் கான சிறந்த தலைமை யாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது பெறும் ஆசிரியர் களை பல்வேறு தகுதிகளின் அடிப்படையில் மாநிலத் தேர்வுக் குழு வால் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இவ்விருது வழங்கும் விழா பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் திருச்சியில் புதனன்று (மார்ச் 6) நடை பெற்றது. விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஒவ்வொரு பள்ளிகளுக்கும் ஊக்கத் தொகையாக தலா ரூ.10 லட்சம் மற்றும் அப்பள்ளி தலைமையாசிரிருக்கு பாராட்டுச் சான்றிதழும், கேடயமும் வழங்கப்பட்டது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மணவாள நகர் கேஎன்சி அரசு மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சா.ஞான சேகரன், கும்மிடிப்பூண்டி அருகில் உள்ள கவரைப் பேட்டையில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி யின் தலைமை ஆசிரியர் ப.திரிபுரசுந்தரி ஆகியோர் விருதுபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.