ராணிப்பேட்டை, நவ. 15- ராணிப்பேட்டை மாவட்டம் முழுக்க 288 கிராமப் பஞ்சாயத்துகள், 8 நகரப் பஞ்சாயத்து கள் மற்றும் 6 நகராட்சிகளை உள்ளடக்கிய 2,500 சதுர கிலொமீட்டர் விரிவுள்ள இடங்களில் பயணித்து 186.9 டன் (186917.70 கிலோகிராம்) பிளாஸ்டிக் கழிவு களை 3 மணி நேரத்தில் சேகரித்து சுத்தமான, சுகாதாரமான மாவட்டத்தினை உருவாக்கிய நிகழ்வு உலக சாதனை படைத்தது. இதற்கு முன்பு சுவிட்சர்லாந்து நாட்டில் 3 மணி நேரத்தில் 128.7 டன் பிளாஸ்டிக் கழிவுகளை நீக்கிய உலக சாதனையை முறியடித்த இந்த நிகழ்வில் 96,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைத் திட்டப் பணி யாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அர்பணிப்புடன் ஈடுபட்டார்கள். தொடர்ந்து கடந்த மாதம் 3ஆம் தேதி ஒரே நாளில் 5 மணி நேரத்தில் ராணிப் பேட்டை மாவட்டத்தின் 288 பஞ்சாயத்து களில் 52,81,647 பனை விதைகளை 880 இடங்களில் நட்டு வைத்து “5 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மிக அதிகமான பனை விதைகள் நடவு செய்து உலக சாதனை படைக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாய்க்கால்கள், குளங்கள், ஏரிகள், குட்டைகள் மற்றும் சாலையோ ரங்களில் இந்த பனை விதைகளனைத்தும் நடப்பட்டன.3 மாதங்கள் இந்த நிகழ்விற்காக பனைவிதைகள் சேகரிக்கப்பட்டது. இதில் 81,000க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி 100 நாள் வேலைத் திட்டப் பணி யாளர்கள், கவுன்சிலர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் மிகுந்த அர்பணிப்புடன் ஈடு பட்டார்கள். இந்த 2 உலக சாதனைகளும் இயற்கை மற்றும் பசுமையைக் காக்கும் விதமாகவும், மனித சமுதாயத்தை உள்ளடக்கிய உலகின் அனைத்து உயிர்களுக்கும் நன்மை விளைவிப்பதாகவும், வருங்கால சந்ததிக ளுக்கும் பயனளிக்கும்படி மிகவும் உயர்ந்த நோக்கத்தில் படைக்கப்பட்டுள்தை பாராட்டி எலைட் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸ் உலக சாதனை நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி முனைவர் ரபி பால்பாக்கி, அட்ஜூ கேட்டர் நவுரா இணைந்து ராணிப்பேட்டை ஆட்சியர் பாஸ்கர பாண்டியனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து கவுரவித்தனர்.