districts

நடைபாதைகளில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்கள் ஏலம்

சென்னை, ஆக. 24-

     நடைபாதைகளில் பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள வாகனங்கள் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என மாநகராட்சி மேயர் அறிவித்துள்ளார்.

     சென்னையில் பெருகிவரும் மக்கள்  தொகைக்கு ஏற்ப போக்குவரத்து நெரி சலும் அதிகரித்த வண்ணம் உள்ளது.  இதனை கருத்தில் கொண்டு மாநக ராட்சி சார்பில் பல்வேறு உள்கட்ட மைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சென்னை யின் முக்கிய பகுதிகளில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருவது பராமரிப்பின்றி நிறுத்தப்பட்டிருக்கும் வாகனங்கள்.

     சென்னை மாநகராட்சியின் பல்வேறு பகுதியில் இருக்கும் நடை பாதைகளை சிறுகடை வணிகர்கள்  ஆக்கிரமித்துள்ளனர். அதேபோல்  பல இடங்களில் நடைபாதைகளில் பராமரிப்பின்றி நீண்ட நாட்களாக  வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட் டுள்ளதால் வாகன ஓட்டிகள் சிரமம்  அடைகின்றனர். மேலும், மேம்பாலத் தின் அடிப்பகுதிகளிலும் கார்கள்,  பைக்குகள் உள்ளிட்ட வாகனங்கள்  தேவையின்றி நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது.

     இந்நிலையில் தற்போது மாநகராட்சியின் முக்கிய பகுதிகளை புதுபொலிவுடன் மாற்றும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. அதையொட்டி பராமரிப்பின்றி நிறுத்தப்பட்ட வாகனங்களை அகற்ற  மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அந்த வகையில், சென்னை மாநகராட் சிக்குட்பட்ட பகுதிகளில் 1,038 வாகனங்கள் சேதமடைந்த நிலையில் பராமரிப்பு இல்லாமல் கிடப்பதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

     இதுதொடர்பாக சென்னை மாநக ராட்சி மேயர் பிரியா கூறுகையில், அடையாளம் காணப்பட்டுள்ள வாகனங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. போக்குவரத்து காவலர்களுடன் இணைந்து நீண்ட காலமாக நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்களின் உரிமையாளர்களுக்கு அபராதம்  விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மேலும், அப்புறப்படுத் தப்படாத வாகனங்கள் செப் 1ஆம் தேதி முதல் காவல் துறையினர் மூலம்  அப்புறப்படுத்தப்பட்டு மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் வைத்து ஏலம் விடப்படும். எனவே போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு இடையூ றாக இருக்கும் வாகனங்களை உரிமையாளர்கள் விரைவில் அப்புறப் படுத்தி மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மேயர் பிரியா கேட்டுக்கொண்டார்.