districts

img

ஆட்சியர் அலுவலகம் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி

விழுப்புரம்,அக்.9- விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்த ஒரு பெண் திடீரென தீக்குளிக்க முயன்றுள்ளார். விழுப்புரம் மாவட்டம், வளவனூர் அருகே உள்ள ராயம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் வசந்தா வயது 55, இவர் வளவனூர் பகுதியில் உள்ள குள்ள சேட்டு என்பவரிடம் 30 சவரன் நகை அடகு வைத்ததாக தெரிகிறது, அந்த நகையை  வசந்தாவை கேட்காமலேயே அவர் விற்பனை செய்ததாக தெரிகிறது, இதுகுறித்து வசந்தா வளவனூர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை, இதனால் திங்கட்கிழமை விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் புகார் மனு கொடுக்க வந்த வசந்தா, திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெய் எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைக்க முயன்றார்.  அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் உடனடியாக விரைந்து வந்து அவரை தடுத்து நிறுத்தி காப்பாற்றினர் மேலும் அங்கிருந்த தீயணைப்புத் துறையினர் அவர் மீது தண்ணீரை ஊற்றி பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தனர். இதனால் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.