districts

குடிநீர் விநியோக தகராறில் இருவரை கொல்ல முயற்சி

அம்பத்தூர், ஏப். 29- பூந்தமல்லி அருகே குடியிருப்புகளுக்கு தண்ணீர் விடுவதில் ஏற்பட்ட தகராறில் 2 பேர் கத்தியால் வெட்டப்பட்டனர். இது தொடர்பாக தலைமறைவாக இருந்த ஊராட்சித் தலைவரின் மருமகன் உள்ளிட்ட 2 பேர் பூந்தமல்லி நீதிமன்றத்தில் திங்கட்கிழமை சரண் அடைந்தனர். பூந்தமல்லி அருகே சென்னீர்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (32), இவரது நண்பர் ஜெயக்குமார். இதற்கிடை யில் கடந்த இரண்டு வாரமாக இவர்கள் இருவரும் சென்னீர்குப்பம் ஊராட்சி பகுதி களில் டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வந்தனர். அதே பகுதியில் அதி முகவைச் சேர்ந்த  சென்னீர்குப்பம் ஊராட்சி தலைவர் கோட்டிஸ்வரி அன்பு வின் மருமகன்  மணிகண்டன் (35), என்பவ ரும் சில ஆண்டுகளாக டிராக்டர் மூலம் குடிநீர் விநியோகம் செய்து வருகிறார். இந்நிலையில் வெங்கடேசன் தண்ணீர் வழங்குவதற்கு மணிகண்டன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு மோதலானது.  கடந்த வாரம் அலுவலகத்தில் புகுந்து வெங்கடேசன், ஜெயக்குமார் ஆகியோரை கத்தியால் வெட்டி விட்டு மணிகண்டன் தரப்பினர் தப்பி சென்றனர். இதுகுறித்து பூந்தமல்லி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர். தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி மணிகண்டன் உள்ளிட்ட  இரு வரையும் கைது செய்ய வேண்டும் என வெங்கடேசன் உறவினர்கள் பூந்தமல்லி - ஆவடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திங்களன்று தலை மறைவாக இருந்த மணிகண்டன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் பூந்த மல்லியில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றம்  2இல் நடுவர் ராஜேஷ் ராஜு முன்னிலையில் சரணடைந்தனர். பின்னர் அவர்  சரணடைந்த இருவரையும் சிறை யில் அடைக்க உத்தரவிட்டார்.