திருவண்ணாமலை, ஜூன் 16- ‘
ரேபிடோ பைக்’ ஓட்டும் இளைஞர்கள் மீதான தாக்கு தலை தடுத்து நிறுத்த வேண்டும் என்று வாலிபர் சங்கம் வலி யுறுத்தியுள்து.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு கூட்டம் திருவண்ணா மலையை அடுத்த வேங்கிக்கால் பகுதியில் நடைபெற்றது. மாநிலத் தலைவர் எஸ். கார்த்திக் தலைமை தாங்கினார். சங்கத்தின் அகில இந்திய தலைவரும், கேரள மாநிலம் மாநிலங்களவை உறுப்பினருமான ஏ.ஏ.ரஹீம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி னார்.
மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்காரவேலன், மாநில துணைச் செயலாளர் எம். கே. பழனி, மாநில பொருளாளர் எஸ். பாரதி, மாவட்ட நிர்வாகிகள் சி.முருகன், சி.எம்.பிரகாஷ், எம். சுகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், ரேபிடோ பைக் ஓட்டும் இளைஞர்கள் மீதான தாக்குதல் தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து நடந்து வருகிறது. தமிழ்நாடு அரசு இந்த பிரச்சனையில் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்.
தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் 12 ஆயிரம் பகுதி நேர ஓவியம், கணினி, தையல், தோட்டக்கலை பாடங்களை கற்றுக் கொடுக்கும் ஆசிரியர்களுக்கு மே மாதம் சம்பளம் வழங்க வேண்டும், திரு வண்ணாமலை மாவட்டத்தில் வளங்களை பயன்படுத்தி வேலை வாய்ப்பு உருவாக்கிட வேண்டும், குறிப்பாக ஆரணியில், பட்டு பூங்கா, செங்கத்தில் சென்ட் தொழிற்சாலை, ஜவ்வ ரிசி தொழிற்சாலை,சுண்ணாம்பு உற்பத்தி தொழிச்சாலை அமைத்திட வேண்டும், திரு வண்ணாமலை மாவட்டத்தில் செங்கம், போளூர் பகுதி களை மையப்படுத்தி புதிய அரசு கலைக்கல்லூரி, தொழிற் சாலையை உருவாக்க வேண்டும், மேல்செங்கம் மத்திய பண்ணையை வேளாண் ஆராய்ச்சி கல்வி நிறு வனங்களாக மாற்றிட வேண்டும், திருவண்ணா மலையில் கிடப்பில் இருக்கும் சிப்காட் தொழிற்சாலையை துவங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.