கிருஷ்ணகிரி, நவ.4- கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் மாரியம்மன் கோயில் புதுப்பிக்கும் பணியின் போது ஏற்பட்ட பிரச்சினையை தொடர்ந்து, பட்டியலின மக்களின் குடியிருப்புகளுக்கு ஆதிக்க சமூ கத்தை சேர்ந்தவர்கள் தீ வைத்து அப்பாவி மக்கள் மீது தாக்கு தல் நடத்தினர். இந்த சம்ப வம் குறித்த செய்தி ‘தீக்கதிரில்’ வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாநில ஆதி திராவிடர் நல ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன் மற்றும் மாநில ஆதிதிராவிடர் நல ஆணைய ஆலோசகர் பி.ராமசாமி ஆகியோர் சனிக்கிழமையன்று (நவ.4) பாதிக்கப்பட்ட பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, தலித் மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, மாவட்ட ஆட்சியர் கே.எம். சரயு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்டோர் உடனி ருந்தனர். அப்போது, தலித் மக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் தலைமை தாங்கிய ராஜன், சதா சிவம், ஊராட்சி மன்றத் தலைவர் கொடிலா அவரது கணவர் ராம லிங்கம் உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலி யுறுத்தியும், கொடிலா ராம லிங்கத்தை ஊராட்சி மன்ற தலை வர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மனு அளிக்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எக்ஸ். இருதயராஜ், வி.கோவிந்தசாமி வட்டச் செய லாளர் டி.ராஜா, மாவட்டக் குழு உறுப்பினர் லெனின் முருகன் ஆகி யோர் தேசிய ஆதிதிராவிடர் நலத் துறை ஆணையரை சந்தித்து பேசினர்.