districts

img

திருவண்ணாமலையில் பெண்களுக்கு தடகள போட்டிகள்

திருவண்ணாமலை, ஆக.23 –  திருவண்ணாமலை மாவட்ட விளை யாட்டு அரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில்  வட்ட அளவில் பெண்களுக்கான தடகள போட்டி நடைபெற்றது. இதில் 14, 17, 19 வயதிற்கு உட்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், 100 முதல் 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தையம், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. தொடக்க விழாவுக்கு மாவட்ட கல்வி அலுவலர் கே.காளிதாஸ் தலைமை தாங்கினார். இதில் பங்கேற்ற மாநில ஹேண்பால் சங்க துணைத் தலைவர் இரா.ஸ்ரீதரன் ஒலிம்பிக் தீபச்சுடரை துவக்கி வைத்தார். போட்டியில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பதக்கமும் சான்றிதழும் வழங்கப்பட்டது.