districts

திருவொற்றியூர் வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுது

சென்னை, பிப்.19   திருவொற்றியூர் வாக்குச் சாவடியில் ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பழுதானதை யடுத்து தி.முக., அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியி னர் மறுதேர்தல் நடத்த வலி யுறுத்தி வாக்குச் சாவடியை  முற்றுகையிட்டு போராட்டத் தில் ஈடுபட்டனர். திருவொற்றியூர் 12-வது  வார்டில் சென்னை பெருநகர  மாநகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இந்த வார் டில் 140 வாக்குகள்  காலை பதிவாகி இருந்தபோது ஓட்டுப்பதிவு எந்திரம் திடீரென பழுதானது. அதை சரி செய்ய முயற்சித்தபோது வெள்ளிக்கிழமை மாதிரி வாக்குகள் பதிவானதாக காட்டியது. இதையடுத்து அந்த எந்திரத்தை மாற்றிவிட்டு வேறு ஒரு எந்திரம் கொண்டு  வரப்பட்டது.அந்த எந்திரத்தில் 36 வாக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலை யில் மீண்டும் எந்திரம் பழு தானது. இதனால் மூன்றா வது வாக்குப்பதிவு எந்திரம் கொண்டு வரப்பட்டது. முதல் எந்திரத்தில் 140 வாக்கு கள் பதிவாகி உள்ளதால் தேர்தல் அதிகாரிகள் அதை  எப்படி கணக்கில் எடுப் பார்கள் என்று கூறி தி.முக.,  அ.தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சியினர் மறு தேர்தல் நடத்த வலியுறுத்தி வாக்குச் சாவடியை முற்றுகையிட்டு போராட் டத்தில் ஈடுபட்டனர். அங்கு சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக வாக்குப்பதிவு நிறுத்தப்பட்டது.