districts

கூர்நோக்கு பள்ளியில் பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

செங்கல்பட்டு,மே 12-  

    செங்கல்பட்டில் சிறுவர்கள் கூர்நோக்கு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் பேக்கரி பொருட்கள் தயாரிக்க பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

    கூர்நோக்கு பள்ளி மாணவர்களுக்கான பயிற்சி நிலையத்தினை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்தார்.  அடுத்த மாதம் முதல் இங்கு பேக்கரி பொருட்கள் உற்பத்தி தொடங்கப்படும் என்று தெரிகிறது. சீர்திருத்த பள்ளியில்  6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் 9 ஆசிரியர்களை கொண்டு கற்றுத்தரப்படுகிறது.