கடலூர், ஜூன் 16-
கடலூர் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த சிறு கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார்(25). இவர் சென்னையிலுள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இவரும் அவரது பக்கத்து ஊரான வாணியம்பாளையத்தை சேர்ந்த நிர்மலா (22) என்பவரும் நீண்ட நாட்களாக பழகி வந்துள்ளனர். இந்நிலையில் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர். நிர்மலாவின் பெற்றோர் மகளை காணவில்லை என்றும் ராம்குமார் கடத்தி சென்றதாகவும் புதுப்பேட்டை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்நிலைய ஆய்வாளர், நிர்மலாவை தேடி வந்தனர். இதற்கிடையில், நிர்மலா, ராம்குமாருடன் புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தார்.