உளுந்தூர்பேட்டை,டிச 18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முயற்சியால் 18 குடும்பங்களுக்கு குடிமனைப்பட்டா கிடைத்துள்ளது. ஆத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேட்டாத்தூர் கிராமத்தில் 18 குடும்பத்தினர் நீண்ட காலமாக வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். குடியிருக்கும் இடத்தை கிராம கணக்கில் ஏற்றி பட்டா வழங்க வேண்டும் என நீண்ட காலமாக கோரி வந்தனர். அண்மையில் நடை பெற்ற உள்ளாட்சித் தேர்த லில் ஒன்றிய கவுன்சிலருக்கு போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் இ.அல மேலுவிடம், பட்டா பெற்றுத் தரக்கோரி 18 குடும்பத்தினரும் மனு அளித்தனர். உள்ளாட்சித் தேர்தலில் ஒன்றிய கவுன்சிலராக இ.அலமேலு தேர்வானபின், மாவட்ட ஆட்சியர் மற்றும் உளுந்தூர்பேட்டை வட்டாட்சியரிடம் பட்டா வழங்கக்கோரி வலியுறுத்தப்பட்டது. இதன் விளைவாக சனிக்கிழமையன்று (டிச.18) வட்டாட்சியர் அலுவலகத்தில் 18 குடும்பங்களுக்கும் பட்டா வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர், மாநிலக்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, ஒன்றிய கவுன்சிலர் இ.அலமேலு, ஒன்றியச் செயலாளர் டி.எஸ்.மோகன் மற்றும் துறை அதிகாரிகள், பயனாளிகள் பங்கேற்றனர். பயனாளிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நன்றி தெரிவித்தனர்.