districts

img

அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை ஆணையம் விசாரணை

விழுப்புரம், மார்ச் 21- விக்கிரவாண்டி அருகே குண்டலப்புலியூரிலுள்ள அன்பு ஜோதி ஆசிரமத்தில் பாதிக்கப்பட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை தானாக முன்வந்து தேசிய மனித உரிமை ஆணையம் செவ்வா யன்று (மார்ச் 21) விசாரணை நடத்தியது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி அருகே குண்டலபுலி யூரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வந்த அன்பு ஜோதி ஆசிரமத்தின் மீது பல்வேறு புகார்கள் எழுந்ததால் பிப்ரவரி 10ஆம் தேதி காவல் துறையி னரும், அரசு அதிகாரிகளும் சோதனை நடத்தினர். இச்சோதனையின் போது உரிய அனுமதியின்றி ஆசிரமம் நடை பெற்று வருவதும், ஆஸ்ர மத்தில் பராமரிக்கப்பட்டு வரும் மனநலம் குன்றியோர், ஆதர வற்றோர் மற்றும் மாற்றுத்திற னாளிகளை அடித்து துன்புறுத்தி யது, குரங்குகளை வைத்து அச்சுறுத்தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது, 20 பேர் காணாமல் போயிருப்பது என அடுக்கடுக் கான பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கண்டறியபட்டு அம்பலமானது. இதையடுத்து ஆசிரம நிர்வாகி அன்பு ஜூபின் பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், ஆசிரம பணியாளர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது செய்ய ப் பட்டு தற்போது நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்  பட்டுள்ளனர்.

மேலும் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர் பான வழக்கு விசாரணையை சிபிசிஐடி காவல் துறையினர் விசாரனண நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்பு ஜோதி ஆசிரம விவகாரம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணை யம், மாநில மகளிர் ஆணை யம் உள்ளிட்டவை ஏற்கனவே விசார ணை நடத்தி முடித்துள்ள நிலையில் தேசிய மனித உரிமை ஆணையம் செவ்வாயன்று விசாரணை மேற்கொண்டது பல்வேறு குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் மனித உரிமை மீறல் நிகழ்ந்துள்ளதாக கிடைத்த புகாரின் பேரில் தேசிய மனித உரிமை ஆணையம் தாமாக முன் வந்து தற்போது விசாரணையை தொடங்கி இருக்கிறது. இதில் தேசிய மனித உரிமை ஆணையத்தின் புலனாய்வு பிரிவு முதுநிலை கண்காணிப்பாளர் பாட்டீல் கேத்தன் பாலிராம் தலைமையில்,  துணைக் கண்காணிப்பாளர் மோனியா உப்தல், ஆய்வாளர் சந்தோஷ்குமார், பிஜூ, ஏக்தா பாதுஷா உள்ளிட்ட 5 பேர் அடங்கிய குழுவினர் இந்த விசார ணையை மேற்கொண்டனர். இந்த குழுவினர் ஆசிரமத்தி னரால் பாதிக்கப்பட்டு முண்டியம் பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவங்கள் குறித்து, கேட்டறிந்தனர்.