districts

உதவி பேராசிரியர் பணியிடங்கள் இடஒதுக்கீட்டில் நிரப்ப சிபிஎம் வலியுறுத்தல்

சென்னை, மே13 - சென்னை பல்கலைக் கழகத்தில் உதவி பேராசிரியர் பணியிடங்களை இடஒதுக்கீட்டு அடிப்படையில் நிரப்ப வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் ஜி செல்வா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: சென்னை பல்கலைக்கழகம் தொலை தூர கல்வி துறைக்கு 23 உதவிப் பேராசிரியர் தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இணைய வழியில் விளம்பரம் கொடுத்துள் ளது. அதில், தேர்ந்தெடுக்கப்படும் உதவிப் பேராசிரியர் பணிக் காலம் 120 நாட்கள் அல்லது நிரந்தர பேராசிரியர்கள் நியமிக்கும் வரை எனவும் மாதத் தொகுப்பூதியம் 30 ஆயிரம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஒரு அரசு பல்கலைக்கழகமே தற்காலிக உதவி பேராசிரியர்கள் விண்ணப்பத்தில் இட ஒதுக்கீடு முறை அடிப்படையில் விண்ணப் பங்களை கோராதது ஏன்? பல்கலைக்கழக மானியக் குழு உதவி பேராசிரியர் பணியிடங்க ளுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் 57,700 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்நிலையில் நிரந்தர உதவி பேராசிரியர்களுக்கு தேவைப் படும் அனைத்து கல்வித் தகுதிகளும் உள்ள டக்கிய தற்காலிக உதவி பேராசிரியர்களுக்கு 30 ஆயிரம் ரூபாய் என நிர்ணயித்திருப்பது எந்த வகையில் நியாயம்?  இந்த முடிவு சிண்டிகேட் கூட்டங் களில் விவாதித்து கூட்டாக முடிவு எடுக்கப் பட்டதா? சிண்டிகேட்டில் முடிவெடுத்திருந் தால் இட ஒதுக்கீடு மறுப்பு, குறைந்த சம்பளம் என்பது எந்த அடிப்படையில் முடிவெடுக்கப் பட்டது? தற்காலிக பணியிடங்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பாவிடில், பணி நிரந்தரம் வாய்ப்பு கிடைக்கும்போது சமூக நீதி அடிப்படையில் வேலைவாய்ப்பு உரிமை பலருக்கு மறுக்கப்படுகிறது. எனவே, உதவி பேராசிரியர் பணியிடங்களை இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்பப்பட வேண்டும். உதவிப் பேராசிரியர்களுக்கு 57,500 ரூபாய் மாத ஊதியம் வழங்க வேண்டும். கல்வித்துறை மற்றும் துறை சாராத பணியிடங்களில் இடஒதுக்கீடு முறை அமல் படுத்துவதையும், நிரந்தர ஊழியர்கள், ஒப்பந்த பணியாளர்கள் என்ற முறையில் ஊதியம் வழங்குவதில் உள்ள பாகு பாடுகளை களைவதற்கும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.