districts

img

சூளைப்பள்ளத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி 15 நாட்களில் தொடங்கும்

சென்னை, மே 3 - சூளைப்பள்ளத்தில் கழிவுநீர் குழாய் அமைக்கும் பணி 15 நாட்களில் தொடங்கும் என்று கழிவுநீரகற்று வாரிய அதிகாரி உறுதி அளித்துள்ளார். விருகம்பாக்கம் பகுதி, 137வது வட்டம், சூளைப்பள்ளத்தில் 44 தெருக்கள் உள்ளன. இந்த பகுதியில் சென்னை பெருநகர  குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் கழிவுநீர்க் குழாய்களை அமைக்க வில்லை. இதனால் அங்குள்ள மக்களே தற்காலிகமாக கழிவுநீர் குழாய்களை அமைத்து, அடையாற்றில் கழிவுகளை வெளியேற்றி வருகின்றனர். குழாய் அமைத்து நீண்ட நாட்கள் ஆன தாலும், மக்கள் தொகை பெருக்கத்தாலும் அடைப்பு ஏற்பட்டு, தெருக்களில் கழிவு நீர் கசிகிறது. இந்த அடைப்புகளை அகற்றி,  குழாய்களை வாரியம் சீரமைக்க மறுக்கிறது.  எனவே, அங்குள்ள மக்கள் சொந்த செலவில்  கழிவுநீர் குழாய்களை சீரமைத்துக் கொள்ளும் நிலை உள்ளது. கழிவு நீரை சுத்திகரிப்பு செய்த பிறகே  ஆற்றில் கலக்க வேண்டும். எனவே, கழிவுநீர்  குழாய்களை வாரியமே அமைத்து பரா மரிக்க வலியுறுத்தி 15 ஆண்டுகளாக மார்க் சிஸ்ட் கட்சி தொடர் போராட்டம் நடத்தி வருகிறது. இதன் காரணமாக 2009ம் ஆண்டு அடை யாறு கரையோரம் 15 வீடுகளை அகற்றி, சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் பணி தொடங்கிய வேகத்தில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி மீண்டும் தொடர் போராட்டத்தை தொடங்கியது.

இதனால், கழிவுநீர் குழாய் மற்றும் சுத்திகரிப்பு  நிலையம் அமைக்க 6.50 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியது. அதன் பிறகும் பணிகள் தொடங்கவில்லை. இந்நிலையில், 44 தெருக்களிலும் புதிய  கழிவுநீர் குழாய்களை அமைக்க வலியுறுத்தி  புதனன்று (மே 3) 137வது வட்ட கழிவுநீர் அகற்று வாரிய அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தியது. 100 அடி சாலை யில் இருந்து முழக்கங்களை எழுப்பியபடி ஊர்வலமாக வந்த மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து வாரிய உதவி பொறி யாளர் தென்றல் அரசி, மார்க்சிஸ்ட் கட்சித்  தலைவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்  கொண்டு, கழிவுநீர்க் குழாய் அமைப்பதற் கான பணிகள் 15 நாட்களில் தொடங்கி  6 மாதத்தில் முடிக்கப்படும் என உறுதி யளித்தார். இந்த போராட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் எம்.ரெங்கசாமி, சி.செங்கல் வராயன், தீ.சந்துரு, பகுதிக்குழு உறுப்பினர்  தீ.விஜயகுமாரி, கிளைச் செயலாளர்கள் சேகர், ஜெயராமன், மீனாட்சி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.