districts

விஷ வாயு தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு உதவி

தாம்பரம், ஜன. 29 - கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கி உயிரிழந்த இருவர் குடும்பத்திற்கு தலா 8 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் ஜன.19ஆம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது ராஜேஷ் (35), ஏழுமலை (35) ஆகியோர் விஷவாயு தாக்கி உயிரிழந்தனர். இதை யடுத்து தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன், உயிரிழந்த குடும்பத்தினர் வீட்டிற்கு சென்று தலா ரூ. 8 லட்சத்திற்கான கா சோலையை வழங்கினார். இதன்பின்னர் அவர் கூறுகை யில், இந்த சம்பவம் குறித்து குற்றப்பத்திரிக்கை சமர்ப்பித்த பின்னர் மேலும் 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இரு குடும்பத்தினர் குழந்தை களின் கல்விச் செலவு முழுவதையும் அரசே ஏற்கும் என்றார்.