தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தின் மாநிலத் தலைவர் பெ.சண்முகம் : -வன உரிமைச் ்சட்டம்-2006 அமலாகவில்லை. வனத்தில் வாழும் மக்களுக்கு ஆக்கிர மிப்பாளர்கள் என பெயர் சூட்டப்படு கிறது. மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்குவதில் தொய்வு ஏற் பட்டுள்ளது. இப்பணியை துரிதப்படுத்த வேண்டும். முன்பெல்லாம் சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தால் நிராகரித் தற்கான காரணத்தை கோட்டாட்சி யர்கள் சொல்வார்கள். இப்போது ஆன்லைன்-முறை வந்துவிட்டதால் ஒற்றை வரியில் “ரிஜெக்ட்” என பதிலளிக்கிறார்கள். சாதிச்சான்றிதழ் கிடைக்காமல் பல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பலரின் எதிர்காலக் கல்வியும் கேள்விக்குறியாகியுள்ளது. சாதிச்சான்றிதழ் பெற்று வேலை க்குச் சேர்ந்தவர்களின் நிலை இன்னும் மோசம். மெய்த்தன்மை சான்றிதழ் எத்தனை முறைதான் அவர்களிடம் அரசுகள் கேட்குமெனத் தெரிய வில்லை. ஓய்வு பெற்ற பின்னரும் மெய்த்தன்மை சான்றிதழ் கேட்கின்ற னர். இதனால் பலர் ஓய்வுக் காலப் பலன்களைப் பெறாமலேயே இறந்து விட்டனர். தமிழகத்தில் பழங்குடியின மக்களுக்காகப் பல்வேறு அமைப்பு கள் செயல்பட்டு வருகின்றன. அவர்க ளையும் நாம் கூட்டுப் போராட்டத்திற்கு அழைத்து வரவேண்டுமென்றார். காவல்துறைக்குக் கண்டனம் முன்னதாக மாநாடு பொதுக் கூட்டம் நடைபெற்ற இடத்தில் கட்டப் பட்டிருந்த கொடிகளை புதனன்று காவல்துறையினர் கழற்றியுள்ளனர். தகவலறிந்து வந்த தலைவர்களிடம் “எந்த ஊர்வலத்திற்கும் நாங்கள் அனுமதி தருவதில்லை.உங்கள் ஊர்வலத்திற்கும் அனுமதியில்லை எனக் கூறியிருக்கின்றனர்”. இதைச் சுட்டிக்காட்டிப் பேசிய பெ.சண்முகம், கருத்துரிமை, பேச்சுரிமை, போராடும் உரிமை, கூட்டும் கூடுகிற உரிமை அனைவருக்கும் உண்டு. இந்த உரிமையை அரசியல் சாசணம் வழங்கியுள்ளது. “அனுமதியில்லை” என்பதை அவ்வப்போது வரும் காவல் கண்காணிப்பாளர்கள் எப்படி முடி வெடுக்கின்றனர்? காவல்துறையின் இந்த நடவடிக்கை வன்மையான கண்டனத்திற்குரியது என்றார்.