districts

img

வீடு கேட்டு ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்த மாற்றுத்திறனாளிகள்

சென்னை, டிச.21 - மாற்றுத்திறனாளிகள் சட்டப்படி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு (குடிசைமாற்று) வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 விழுக்காடு வீடுகளை வழங்க வேண்டுமென்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர்.  அப்போது செய்தி யாளர்களிடம் பேசிய தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் டி.வில் சன், பொதுச்செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் கூறியதாவது: மாற்றுத்திறனாளி களுக்கு வாடகை வீடு கிடைப்பது சிரமமாக உள்ளது. சென்னையில் வாரிய வீடுகளை 9 லட்சம் ரூபாய் வரை பங்களிப்பு தொகை பெற்றுக் கொண்டு வீடுகளை வழங்குகின்றனர். இவ்வளவு தொகை  கொடுத்து மாற்றுத் திறனாளிகளால் வீடுகள் வாங்க முடியாது. ஆகவே, சட்டப்படி 5  விழுக்காடு என்ற அடிப்படை யிலும், சமூக பாதுகாப்பு திட்டங்களில் 25 விழுக்காடு மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதலாக வழங்க வேண்டும் என்ற முறையி லும், முதலமைச்சர் முன்னு ரிமை அடிப்படையில் வீடுகள் தரப்படும் என்ற அறி விப்பின்படியும் வீடுகளை ஒதுக்க வேண்டும். வீடுகளுக்கான வைப்புத் தொகையை மானியமாக அரசு தர வேண்டும். எஞ்சிய  தொகையை மாதத்த வணையில் செலுத்த வழி வகை செய்ய வேண்டும்.  கட்டுமானப் பணியின் போது, உயரம் குறைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தரைதளத்தில் ஒதுக்கும் வகையிலும், பிற மாற்றுத் திறனாளிகளுக்கு அடுத்த டுத்த மாடிகளிலும் வீடுகளை ஒதுக்க வகையிலும் பிரத்தியேகமான முறையில் அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். இந்த போராட்டத்தை அடுத்து ஆட்சியர் அமிர்த ஜோதி நேரடியாக தரை தளத்திற்கு வந்த சங்கத்  தலைவர்களிடம்  மனுக் களை பெற்றுக்கொண்டார். மேலும் கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவர்,  தனி இருக்கை அமைத்து மனுக்களை தனித்தனியாக பெறவும் உத்தரவிட்டார். இந்த போராட்டத்தில் சங்கத்தின் சென்னை மாவட்ட செயல்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.பி.பாபு, மாவட்ட நிர்வா கிகள் ஆர்.ஜெயச்சந்திரன், எஸ்.ராணி, ஆர்.நடராஜன் (வடசென்னை), டி.சுரேந்தர், எஸ்.மனோன்மணி, என்.மனோகரன் (மத்திய சென்னை), ஏ.கிருஷ்ணன், எம்.குமார், ஆர்.லாரன்ஸ் ஆரோக்கிய சகாயராஜ் (தென் சென்னை) உள்ளிட் டோர் பேசினர்.