districts

பாலிசிதாரர்களின் தேவைக்கேற்ப புதிய பாலிசிகளை வெளியிடுக! காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க மாநாடு கோரிக்கை

சென்னை, ஜூலை 10 - பாலிசிதாரர்கள் தேவைக்கேற்ப புதிய பாலிசி களை வடிவமைத்து வெளி யிட வேண்டும், வேண்டும் என்று எல்ஐசி ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். காப்பீட்டுக் கழக ஊழி யர் சங்கத்தின் (ஐசிஇயு) சென்னை பகுதி-1ன் 65வது  மாநாடு ஜூலை 9, 10  தேதிகளில் அண்ணாசாலை யில் உள்ள எல்ஐசி வளாகத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில்,  புதிய ஓய்வூதிய திட்டத்தையும் ரத்து செய்து, 1.4.2010க்கு பிறகு பணியில் சேர்ந்தவர் களுக்கும் நடைமுறையில் உள்ள ஓய்வூதிய திட்டத்தை  செயலபடுத்த வேண்டும், 2013ம் ஆண்டே ஒப்புக் கொண்டபடி சென்னை கோட்டம் 1 மற்றும் 2 ஆகிய வற்றிற்கு பதவி உயர்வு களை தனித்தனியாக வழங்க வேண்டும். பாலிகள் மீதான பிரிமியத்திற்கு விதிக்கப் படும் 18 விழுக்காடு ஜிஎஸ்டி-யை ரத்து செயய வேண்டும், எல்ஐசி-யின் விற்கப்பட்ட 3.5 விழுக் காடு பங்குகளை திரும்ப பெற வேண்டும், மூன்றாம், நான்காம் பிரிவு ஊழியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள் ளிட்ட தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் ஜி.ஜெயராமன் தலைமை தாங்கினார்.

பொதுச் செய லாளர் எஸ்.ரமேஷ்குமார் வரவேற்றார். அகில இந்தி வங்கி அதிகாரிகள் சங்க கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர் தாமஸ் பிராங்கோ மாநாட்டை தொடங்கி வைத்தார். அகில இந்திய இன் சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் எம்.கிரிஜா, தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.ராஜப்பா, துணைத்தலைவர்கள் கே.சுவாமிநாதன், ஆர்.சர்வமங்களா, இணைச் செயலாளர் சுரேஷ், ஐசிஇயு சென்னை பகுதி-2ன் தலைவர் கே.மனோகரன், ஐசிஇயு சென்னை பகுதி-1ன் இணை செயலாளர் டி.ரமேஷ், துணைத் தலை வர் எஸ்.ரவிக்குமார், சிஎச்ஆஜிஐஇஏ பொதுச் செயலாளர் எம்.நாகராஜன் உள்ளிட்டோர் பேசினர். 44பேர் கொண்ட பொதுக் குழுவின் தலைவராக ஜி.ஜெயராமன், பொதுச்  செயலாளராக எஸ்.ரமேஷ் குமார், பொருளாளராக  யு.ரமேஷ்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.