வேலூர். டிச 12 - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞரின் பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் வேலூர் முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தமிழ்நாடு சட்டமன்ற பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பெ.குமாரவேல் பாண்டியன், ‘சட்டமன்ற நாயகர் கலைஞர்’ நூற்றாண்டு விழா குழு உறுப்பினர் ஞானசேகரன், சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன், மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளர் பாலசுப்பிரமணியன், சட்டமன்ற பேரவை செயலகம் இணை செயலாளர் கருணாநிதி, வருவாய் கோட்டாட்சியர் கவிதா, முத்துரங்கம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் அ.மலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.