திருவண்ணாமலை,ஜூலை 17-
திருவண்ணாமலை-திருக்கோவிலூர் ரோடு, நகராட்சி அலுவலகம் எதிரில் அமைந்துள்ள கலை ஞர் திடலில், திருவண்ணா மலை மாவட்ட திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மாபெரும் பொதுக் கூட்டம் கழக உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பி னரும், மாவட்ட கழக செயலாளரும் பொதுப் பணித் துறை அமைச்சரு மான எ.வ.வேலு தலைமை வகிக்கிறார்.
இளைஞர் அணி செய லாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், மூத்த கழக முன்னோடிகளுக்கு பொற்கிழிகள் வழங்கியும், 10,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
கழக தணிக்கைக்குழு உறுப்பினர் கு.பிச்சாண்டி, மக்களவை உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, மாவட்ட துணைச் செய லாளர் மு.பெ.கிரி எம்.எல்.ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் எம்.எல்.ஏ, சட்டமன்ற உறுப் பினர்கள் எஸ்.அம்பேத் குமார், ஒ.ஜோதி ஆகி யோர் முன்னிலை வகிக்கின்ற னர். வடக்கு மாவட்ட கழக செயலாளர் எம்.எஸ். தரணிவேந்தன் வரவேற் கிறார்.