திருவண்ணாமலை, மார்ச் 10- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் கலை இலக்கிய இரவு திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே சனிக்கிழமை (மார்ச் 9) நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு மாவட்டச் செய லாளர் மு. பாலாஜி தலைமை தாங்கினார். வரவேற்பு குழு தலை வர் இலியாஸ் சர்க்கார் வரவேற்றார். வைகறை கோவிந்தன் ஆ.பாஸ்கர், எஸ். கருணா, காளிதாஸ் ஆகி யோரின் படங்களை வழக்கறிஞர் எஸ். அபிராமன் திறந்து வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் அ. செந்தில்குமார் கலை இலக்கிய இரவின் நோக்கம் குறித்து உரை யாற்றினார். இந்த நிகழ்ச்சியை மாநில பொருளாளர் சைதை ஜெ துவக்கி வைத்தார். ‘தமிழர் பக்தி மரபும் சமத்துவமும்’ என்ற தலைப்பில் பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன், ‘எல்லாம் ஒன்றல்ல.. ஒன்றாய் இருக்கிறோம்’ என்ற தலைப்பில் பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா, ‘பகுத்தறிவும் தமிழ்ச் சமூகமும்’என்ற தலைப்பில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் சே. மா. மதிவதனி ஆகியோர் சிறப்புரை யாற்றினர். சாகித்திய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர் உதயசங்கரை பாராட்டி எஸ்கேபி கல்வி குழும தலை வர், எழுத்தாளர் கு. கருணாநிதி உரை யாற்றினார். சிறப்பு கவிதை பிரிவில் கவிஞர்கள் நா. முத்து வேலன், தமிழ் இலக்கியன். உ. கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கவிதை வாசித்தனர். தொடர்ந்து, நடம் நாடக இயக்கம் சார்பில் சிந்தாமணி செல்வியின் டைரி என்ற நாடகம் நடைபெற்றது. நெறி யாளர் வசந்தன், திரைக் கலைஞர் அன்பரசி ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். தோழர் எஸ். கருணா எழுதிய “அவதானிப்புகள்” கட்டுரை நூலை பொதுச் செயலாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட, தமுஎகச திரைப் பள்ளி மாணவர்கள் பெற்றுக் கொண்டனர். ஒப்பாரி இசை நிகழ்ச்சி கலை இலக்கிய இரவில், ஒப்பாரி கலைக்குழுவின் ஒப்பாரி இசை நிகழ்ச்சியை மாநிலக் குழு உறுப்பி னர் சொர்ணமுகி கருணா துவக்கி வைத்தார். கிராமிய இசை நிகழ்ச்சி, தொல்குடி பாடல்கள், தோல் கருவி பெரிய மேளம், வீணை இசை கச்சேரி, புத்தகக் கண்காட்சி, புகைப்பட கண்காட்சி, புதுகை பூ பாலம் குழு வினரின் அரசியல் நையாண்டி கச்சேரி உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. முன்னதாக திண்டிவனம் சாலை அம்பேத்கர் சிலை அருகில் இருந்து துவங்கிய கலைப் ஊர்வலத்தை சந்துரு துவக்கி வைத்தார். குழந்தை வேலு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியை கிளை தலைவர் உ. கிருஷ்ணமூர்த்தி தொகுத்து வழங்கி னார், கிளைத் பொருளாளர் மா. பரிதிமாற் கலைஞன் நன்றி கூறினார்.