districts

சென்னை முக்கிய செய்திகள்

ஆயுதப்படை காவலர் தற்கொலை

சென்னை, மார்ச் 23- சென்னை கொருக்குப்பேட்டையில் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து  காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.  கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகரை சேர்ந்தவர் தீபன் (38). இவர் சென்னை பெருநகர காவல்துறையின் ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வந்தார். தீபனுக்கு விஜயலட்சுமி என்ற மனைவியும், 10 வயதில் ஒரு மகனும் உள்ளனர். கணவன் - மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக விஜயலட்சுமி, தனது மகனுடன் தீபனை விட்டு பிரிந்து சென்றுவிட்டார். இதற்கிடையே பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக தீபன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் விரக்தியுடன் காணப்பட்ட தீபன், அதிகமாக மது அருந்தி வந்துள்ளார். இந்நிலையில் தீபன் வெள்ளிக்கிழமை மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். வீட்டில் தனது அறைக்குச் சென்ற தீபன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதை சிறிது நேரத்திற்கு பின்னர் பார்த்த அவரது தாய் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து தகவலறிந்டது சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே.நகர் காவல் துறையினர்  தீபன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழகிய  தருணங்களை  மகிழ்ச்சியாக மாற்றங்கள்

சென்னை, மார்ச் 23- வாழ்க்கையின் அழகிய தருணங்களை மகிழ்ச்சியாக மாற்றுவதை வலியுறுத்தும் புதிய காணொலியை ஒன்றை விவோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.  வி30 மாடல் ஸ்மார்ட்போன்கள் மூலம் நாள்தோறும் ஒவ்வொரு தருணங்களையும் மிகவும் அழகாக புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியாக வாழ்ந்திடுங்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் இந்த காணொலி  தயாரிக்கப்பட்டுள்ளது. மூத்த குடிமக்கள் இருவரது உறவில் ஏற்படும் உணர்வுபூர்வமான நிகழ்வுகள் இந்த காணொலியில் இடம் பெற்றுள்ளது. திருமண நாளை மறந்ததற்கு ஈடுசெய்ய, ஒரு பெரியவர் தனது மனைவிக்கு ஸ்வெட்டர் பின்னுவதைப்போல் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது ஒவ்வொரு தருணமும், எவ்வளவு சாதாரணமானதாக இருந்தாலும், அதை வீடியோவாக எடுக்கும்போது  அதை அழகாக மாற்ற முடியும் என்ற கருத்தை அந்த விளம்பரம்  வலியுறுத்துகிறது என்று  விவோ இந்தியா நிறுவனத்தின் நிறுவன ஆலோசனைப் பிரிவு தலைவர் கீதாஜ் சன்னானா  கூறியுள்ளார்.

கடற்கரை - வேலூர் பயணிகள் ரயில் சேவை  திருவண்ணாமலை வரை நீட்டிப்பு

சென்னை, மார்ச் 23- திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கடற் கரையில் இருந்து வேலுார் கன்டோன் மென்டிற்கு இயக்கப்படும் பயணியர் சிறப்பு  ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு  செய்யப்பட உள்ளது என சென்னை ரயில்வே  கோட்டம் அறிவித்துள்ளது. பௌர்ணமி அன்று திருவண்ணாமலை யில் நடைபெறும் கிரிவலத்தில் பங்கேற்க பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகளும், தெற்கு ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்படும். அதன்படி திருவண்ணாமலை பவுர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு, சென்னை கடற்கரையில் இருந்து வேலுார் கன்டோன்மென்டிற்கு இயக்கப்படும் பயணியர் சிறப்பு ரயில் திருவண்ணாமலை வரை நீட்டிப்பு செய்யப்பட உள்ளது என சென்னை ரயில் கோட்டம் தெரிவித்துள் ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே  கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப் பில், சென்னை கடற்கரையில் இருந்து வரும்  24ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில், வேலூர் கண்டோன்மென்டை இரவு 9:45 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு நள்ளிரவு 12.5 மணிக்கு திருவண்ணாமலையை சென்றடையும் திருவண்ணாமலையில் இருந்து வரும் 25ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் பயணியர் சிறப்பு ரயில், வேலூர்  கண்டோன்மென்டை அதிகாலை 5.35 மணிக்கு அடையும். அங்கிருந்து புறப்பட்டு  சென்னை கடற்கரைக்கு காலை 9.5 மணிக்கு அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பராமரிப்பு பணி: புறநகர் மின்சார  ரயில் சேவையில் மீண்டும் மாற்றம்

சென்னை, மார்ச் 23- பொன்னேரி - மீஞ்சூர் இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவதால் சென்னை புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது. சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.30, 10.35 மணிக்கு  இயக்கப்படும்  ரயில் சேவை,  வரும் 25, 26 ஆகிய தேதி களில் எண்ணூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9.45 மணிக்கு இயக்கப்படும்  ரயில் சேவை  25, 26 ஆகிய தேதிகளில் மீஞ்சூர் வரை மட்டுமே இயக்கப்படும். சென்னை சென்ட்ரல்-கும்மிடிப்பூண்டி இடையே காலை 9 மணிக்கு இயக்கப்படும் ரயில்  சேவை 27ஆம் தேதி மீஞ்சூர்  வரை மட்டுமே இயக்கப் படும். கும்மிடிப்பூண்டி-சென்னை சென்ட்ரல் இடையே காலை 9.55 மணிக்கு இயக்கப்படும்  ரயில் சேவை 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மீஞ்சூ ரில் இருந்தும், கும்மிடிப் பூண்டி - சென்னை கடற்கரை இடையே காலை 10.55 மணிக்கு இயக்கப்படும்  ரயில் சேவை  25, 26 ஆகிய தேதிகளில் மீஞ்சூரில் இருந்தும், சூலூர் பேட்டை-சென்னை சென்ட்ரல் இடையே காலை 10 மணிக்கு இயக்கப்படும்  ரயில் சேவை 25, 26 ஆகிய  தேதிகளில் எண்ணூரில் இருந்தும் இயக்கப்படும் என  தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் தெரிவித்துள்ளது.