சென்னை, ஜூலை 18 - ஒப்பந்த அடிப்படையில் ஓட்டு நர்களை பணிக்கு அமர்த்தினால் தொழிலாளர்கள் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்கள் எச்சரித்தனர். மாநகர போக்குவரத்து கழ கத்தில் 532 ஓட்டுநர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்த நிர்வாகம் ஒப்பந்தம் கோரி இருந்தது. இந்த ஒப்பந்த புள்ளிகள் திங்களன்று (ஜூலை 18) திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்து. ஒப்பந்த பேச்சுவார்த்தை நடந்து வரும் சூழலில் நிர்வாகத்தின் இந்த நட வடிக்கை தொழிலாளர்கள் மத்தி யில் அதிருப்தியை ஏற்படுத்தியது. தொழிலாளர்களின் கோரிக்கை கள் தொடர்பாக தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பு கொடுக்கப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் பணி நிலைமைகளில் எவ்வித மாற்றமும் செய்யக் கூடாது. விதிகளுக்கு மாறாக ஒப்பந்த முறையில் ஓட்டுநர் களை எடுப்பது தொழிற்தகராறு சட்டத்திற்கு விரோதமானது. இந்த நடவடிக்கையின் வாயிலாக இடஒதுக்கீடு மறுக்கப்படும். எனவே, ஒப்பந்த முறையில் ஓட்டு நர்கள் எடுப்பதை கைவிட வலியுறுத்தி பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்த்தில் ஈடுபட்டனர். இதை யடுத்து அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு தலைவர்களுடன் மேலான் இயக்குநர் அன்பு ஆபிர காம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின் தொழிலாளர்களிடம் பேசிய தொமுச பொருளாளர் கி.நட ராஜன், “அதிகாரிகள் தன்னிச்சை யாக முடிவெடுத்தால் விளைவுகள் விபரீதமாக இருக்கும்” என்று எச்சரித்தார். அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் (சிஐடியு) தலை வர் ஆர்.துரை குறிப்பிடுகையில், “ஒப்பந்த அடிப்படையில் ஓட்டு நர்களை எடுத்தால் தொழிலா ளர்கள் தன்னிச்சையாக வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்று மேலான் இயக்குநரிடம் தெரி வித்தோம். அதற்கு பதிலளித்த அவர், தொழிலாளர்களின் உணர்வு களை துறைச் செயலாளரின் கவனத் திற்கு கொண்டு சென்று ஒப்பந் தத்தை நிறுத்த முயற்சிப்பதாக உறுதி யளித்தார்” என்று தெரிவித்தார்.