சென்னை, ஏப். 9 - பெருநகர சென்னை மாநகராட்சி நகர விற்பனை குழு தேர்தல் ஏப்.27 அன்று நடை பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதுகாத்தல் மற்றும் வியா பாரத்தை ஒழுங்குபடுத்துதல் திட்டம் மற்றும் விதிகள், 2015-ன் படி மாநகராட்சி யில் உள்ள சாலையோர வியாபாரிகளின் கணக்கெடுத்தல், அடையாள அட்டை வழங்குதல், விற்பனை செய்யக்கூடிய மண்ட லங்களில் அடிப்படை திட்டம் வகுத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்படி 35 ஆயிரத்து 588 சாலையோர வியா பாரிகள் கணக்கெடுப்பில் சேர்க்கப் பட்டுள்ளனர். தமிழ்நாடு தெருவோர வியாபாரிகள் திட்டம்-2015, விதி 11-ன்படி, மாநகராட்சி ஆணையர் தலைமையில் 15 உறுப்பி னர்களைக் கொண்ட நகர விற்பனை குழு வெண்டிங் கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் உள்ளாட்சி அமைப்பின் மருத்துவ அதிகாரி -1, காவல்துறை அதிகாரி -1, போக்குவரத்து காவல் அதிகாரி-2, உள்ளாட்சி அமைப்பு அதிகாரி -1, தெருவோர வியாபாரிகளின் பிரதிநிதி-6, வணிகர் சங்கங்களின் பிரதிநிதி - 1, அரசு சாரா அமைப்பு மற்றும் சமூகம் சார்ந்த அமைப்பு பிரதிநிதிகள் -2 பேர் உறுப்பி னர்கள் இடம் பெறுவார்கள். இதில், தெருவோர வியாபாரிகளின் பிரதி நிதிகளாக 6 பேர் தேர்தல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதாவது, ஆதி திராவிடர், பழங்குடியினர் ஒருவர், பிசி-யில் ஒருவர், சிறுபான்மையினர் ஒருவர், மாற்றுத்திறனாளிகள் ஒருவர், மகளிர் ஒரு வர், பொது வகுப்பினர் ஒருவர் என 6 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். எஞ்சிய 9 உறுப்பி னர்கள் மாநகராட்சி ஆணையர் பரிந்துரை செய்வார். அதன்படி, ஏப்.17 அன்று தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கி ஏப்.28 அன்று வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு சாலை யோர வியாபாரிகளில் இருந்து ஆறு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்காக, சாலையோர வியா பாரிகளின் பெயர் பட்டியல் ஏப்.8 அன்று ஆணையர் வெளியிட்டார். இந்த பட்டியல் ரிப்பன் மாளிகையில் உள்ள சாலை யோர வியாபாரிகளுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலு வலர் அம்மா உணவகம் , மண்டல அலுவ லகங்களில் வைக்கப்பட்டுள்ளது. மாநக ராட்சி இணையதளத்திலும் (https://chennaicorporation.gov.in/gcc/streetvendor) வெளியிடப்பட்டுள்ளது. சாலையோர வியாபாரிகளுக்கு ஏப்.10 முதல் அந்தந்த மண்டல அலுவலகத்தின் வாயிலாக அடையாள அட்டை வழங்கப்படும். இதன்படி, வேட்பு மனு ஏப்.17-19ந் தேதி வரை வழங்கப்படும். வேட்பு மனு 19ந் தேதி தாக்கல் செய்யலாம். 20ந் தேதி வேட்பு பரிசீலிக்கப்படும். 21ந் தேதி வேட்பு மனுவை திரும்ப பெறலாம். ஏப்.27ந் தேதி 15 மண்டல அலுவலகங்களிலும் தேர்தல் நடைபெறும். ஏப்.28ந் தேதி ரிப்பன் மாளிகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு மார்ச் 31 அன்று நாளிதழ்களில் வெளியிடப்பட்டுள்ளது, இவ்வாறு மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.