ராணிப்பேட்டை, ஜூலை 27 - ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற 16 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் வட்டார தலைவர் கே. முருகேசன் தலைமையில் சோளிங்கரில் சனிக்கிழமை (ஜூலை. 27) பணி நிறைவு பாராட்டு விழா நடை பெற்றது. இதில் வட்டார துணை தலைவர்கள், துணை செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். வட்டார பொருளாளர் ஜி. ரங்கநாயகி வரவேற்புரையாற்றினார். வட்டார செயலாளர் எம். மனோ குமார் இயக்க செயலறிக்கையை முன்வைத்தார். மாநில பொதுச் செயலாளர் சா. மயில், மாநில துணைத் தலைவர் பி.ஜெ. அமர்நாத், மாநில செயற்குழு உறுப்பினர் பி. குணசேகரன், மாவட்ட தலைவர் கே.ஆர். பிரபாகரன், மாவட்ட செயலாளர் செ. சரவணன், மாவட்ட பொருளாளர் மின்னி செலினா, வட்டாரச் செயலாளர் த. ரஜினி ஆகியோர் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களை பாராட்டி சிறப்புரையாற்றினார்கள். இறுதியாக வட்டார செயற்குழு உறுப்பினர் எ. ஸ்டாலின் நன்றி கூறி முடித்து வைத்தார். முன்னதாக மாநில பொதுச் செயலாளர் சா. மயிலுக்கு தமுஎகச ராணிப்பேட்டை மாவட்ட குழு சார்பில் தமுஎகச மாவட்ட செயலாளர் த. ரஜினி சால்வை அணிவித்தார். உடன் முன்னாள் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நிலவு குப்புசாமி உடனிருந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் பணி செய்து ஓய்வு பெற்ற செ. ஆதித்தன், என். சேகரன், எஸ். பழனி, எஸ். சாந்தி, ஹெல்டா கெட்சி, எஸ். பத்மாவதி, கே. பானுமதி, எஸ். செல்வி, வி. எழிலரசி, சரளா நவநீதம், மினி ஃபுளோரா, கே. சொர்ணலதா, ஆர். மணி, கே. பெருங்கோபெண்டு, சி. ஜோதி, எ. வனஜா ஆகிய பணி நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு கேடயங்களை மாநில பொதுச்செயலாளர் ச. மயில் வழங்கினார்.